Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போர்ச் சூழல் காரணமாக 85000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

Go down

போர்ச் சூழல் காரணமாக 85000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்: சீனித்தம்பி யோகேஸ்வரன் Empty போர்ச் சூழல் காரணமாக 85000 பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர்: சீனித்தம்பி யோகேஸ்வரன்

Post by oviya Sun Mar 15, 2015 11:49 am

கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 85000 பெண்கள் தங்கள் கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகம் நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு சனிக்கிழமை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இடம் பெற்ற போது, அதில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்த காலத்தில் விதவைகளாக்கப்பட்டவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலயே இருக்கின்றனர். அதிலும் இளம் வயதில் விதவைகளாக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் 19.4 வீதத்தினால் காணப்படுகின்ற போது, இளம் விதவைகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடுமையாகப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

கணவனை இழந்து, தனது வறுமை காரணமாக இளம் பெண்கள் கீழத்தேய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் பணிப் பெண்களாகச் செல்கின்றார்கள். அவ்வாறு தனது குடும்ப கஸ்டத்தின் காரணமாக செல்லும் பெண்களில் பல பெண்கள் அங்கு பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.

சிலர் துன்புறுத்தப்படுகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்ற பல பெண்கள் சவப்பெட்டிகளில் வந்த வரலாறு நமது சமுகத்தில் அதிகம் காணப்படுகின்றது.

கடந்த 2006ம் ஆண்டு பிற்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களது இடங்களுக்கு குடியேற்றப்பட்டார்கள். ஆனால், அந்தக் குடியேற்றத்தின் பின்னர் 100க்கும் மேற்பட்டடோர் காணாமல் போயுள்ளார்கள். கடத்தப்பட்டுமுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் அதிகமானோர் இளம் குடும்பத்தலைவர்கள் என்றபடியால், அக்குடும்பத் தலைவிகள் வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்குடும்பத் தலைவர்களைக் கடத்தியவர்கள் இன்று சௌகரியமாக வாழ்ந்து வருகின்றனர்.

காணாமல் போனவர்களது உறவுகள் என்னிடம் சொன்னார்கள். எங்களது கணவனை, எங்களது உறவுகளைக் கடத்தியவர்களை எங்களுக்குத் தெரியும். அவர்களைக் காட்டிக் கொடுத்து, தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு எங்களுக்கு களமமைத்துத் தாருங்கள் என்று. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு காந்தி ஜீ இளைஞர் கழகத்தின் தலைவர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில், அதிதிகளாக கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினரால் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், இளைஞர் கழக உறுப்பினர்களால் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum