Top posting users this month
No user |
தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை...ஏழைகளுக்கு உதவிய வார்த்தை
Page 1 of 1
தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை...ஏழைகளுக்கு உதவிய வார்த்தை
ஏழைகளுக்கு உதவுவதற்காக மகாத்மா காந்தி அழகாக பேசி, ஒரு பெண்ணிடம் இருந்து நகைகளை வாங்கிய சம்பவம் மிகவும் ருசிகரமானது.
பீகார் பூகம்பத்தின்போது காந்திஜி முஜப்பூர் சென்று அங்கு புகழ் பெற்ற மகாராஜா திரு. மகேஷ்பிரவித்சிங் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.
குளித்தபின் சாப்பிடும் நேரம் வந்தது. திரு. சிங் அவர்களின் மகள் எல்லா உணவுகளையும் கொண்டு வந்து பரப்பிக்கொண்டிருந்தாள். ”உன்னுடைய தாயாரை அனுப்பு” என்று காந்திஜி அந்தச் சிறுமியைப் பார்த்து கூறினார்.
வெள்ளாட்டுப்பால் எடுத்துக்கொண்டு திரு.சிங் அவர்களின் மனைவி வந்தார், கையில் வளையல்களும் மோதிரமும், கழுத்தில் தங்க அணிகலன்களும் இருந்தன.
பாலை எடுத்துக் கொண்டே காந்திஜி ”இந்தத் தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை. தங்க நகைகள் இல்லாமலேயே நீ மிகவும் நன்றாக இருக்கிறாய்.
இவைகளை என்னிடம் கொடுத்துவிடு. கஷ்ட்டப்படும் மக்களுக்கு இதனைக்கொண்டு உதவி செய்கிறேன் எனக்கூறினார்.
திரு.சிங் அவர்களின் மனைவி எல்லா அணிகலன்களையும் உடனே கழற்றி காந்திஜிக்கு முன் சமர்ப்பித்தாள். காந்திஜி கலகலவென்று சிரித்தார்.
நகை வாங்கிக்கொண்டு ”இதோ, பார்! நான் உன்னை நகைகளின் மீதே வெறுப்படையச் செய்துவிட்டேனே! என்று திருமதி சிங்கிடம் கூறினார்.
”தாங்கள் எங்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்ததே நாங்கள் செய்த பாக்கியம். நகைகளை உங்களிடம் கொடுத்தபின் நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்” என திருமதி சிங் கூறினாள்.
திரு. சிங்கின் மகளை முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்து விட்டும், திருமதி சிங்கிற்குத் தம் ஆசிர்வாதத்தைத் தெரிவித்த பிறகு காந்திஜி அவ்விடமிருந்து புறப்பட்டார்.
பீகார் பூகம்பத்தின்போது காந்திஜி முஜப்பூர் சென்று அங்கு புகழ் பெற்ற மகாராஜா திரு. மகேஷ்பிரவித்சிங் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார்.
குளித்தபின் சாப்பிடும் நேரம் வந்தது. திரு. சிங் அவர்களின் மகள் எல்லா உணவுகளையும் கொண்டு வந்து பரப்பிக்கொண்டிருந்தாள். ”உன்னுடைய தாயாரை அனுப்பு” என்று காந்திஜி அந்தச் சிறுமியைப் பார்த்து கூறினார்.
வெள்ளாட்டுப்பால் எடுத்துக்கொண்டு திரு.சிங் அவர்களின் மனைவி வந்தார், கையில் வளையல்களும் மோதிரமும், கழுத்தில் தங்க அணிகலன்களும் இருந்தன.
பாலை எடுத்துக் கொண்டே காந்திஜி ”இந்தத் தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை. தங்க நகைகள் இல்லாமலேயே நீ மிகவும் நன்றாக இருக்கிறாய்.
இவைகளை என்னிடம் கொடுத்துவிடு. கஷ்ட்டப்படும் மக்களுக்கு இதனைக்கொண்டு உதவி செய்கிறேன் எனக்கூறினார்.
திரு.சிங் அவர்களின் மனைவி எல்லா அணிகலன்களையும் உடனே கழற்றி காந்திஜிக்கு முன் சமர்ப்பித்தாள். காந்திஜி கலகலவென்று சிரித்தார்.
நகை வாங்கிக்கொண்டு ”இதோ, பார்! நான் உன்னை நகைகளின் மீதே வெறுப்படையச் செய்துவிட்டேனே! என்று திருமதி சிங்கிடம் கூறினார்.
”தாங்கள் எங்கள் வீட்டில் விருந்தாளியாக இருந்ததே நாங்கள் செய்த பாக்கியம். நகைகளை உங்களிடம் கொடுத்தபின் நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்” என திருமதி சிங் கூறினாள்.
திரு. சிங்கின் மகளை முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்து விட்டும், திருமதி சிங்கிற்குத் தம் ஆசிர்வாதத்தைத் தெரிவித்த பிறகு காந்திஜி அவ்விடமிருந்து புறப்பட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum