Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்கை

Go down

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்கை Empty ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று! இலங்கை தொடர்பாக பல அமைப்புக்கள் அறிக்கை

Post by oviya Mon Mar 02, 2015 1:07 pm

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த அமர்வில் இலங்கை குறித்து ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கை குறித்த அறிக்கைகளை சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதே மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் உட்பட பல அமைப்புகள் சமர்ப்பித்துள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் பாதிக்கப்படுகின்றன என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை சீர்திருத்தவென அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட புனர்வாழ்வுத் திட்டம் குறித்து அந்த அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.

மேலும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறிப்பிடும் விதத்தில் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2014ம் ஆண்டில் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர்.

இலங்கையின் புதிய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிரான கடந்தகால சம்பவங்கள் குறித்து விசாரிப்பதாக சாதகமான உறுதிமொழியை வழங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

இந்த சாதகமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் காணப்படுகின்ற தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் முடிவிற்கு வருமா என்பது தெரியவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவும், மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் இலங்கையின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு அதனை கோரவெண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான ஆசிய மன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் புதிய அரசாங்கம் அளித்துள்ள உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கம் இந்த வாக்குதிகளை செயற்பாடுகளாக மாற்றும் அதன் மூலம் இலங்கையில் ஓரு தசாப்த காலமாக சட்டத்தின் ஆட்சிக்கும்,மனித உரிமைகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் கடும் சவாலாக விளங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்
» மனித உரிமைகள் தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum