Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து

Go down

தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து Empty தேர்தலின் பின் மலையகத்தில் அராஜகம் புரிய நினைத்தவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது: ம.மா.உ.எஸ்.ஸ்ரீதரன்- ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து

Post by oviya Wed Feb 18, 2015 1:26 pm

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் வெற்றி பெற்றதன் பின்பு மலையகத் தலைமைகளை அடக்கி ஆளாலாமென்று மனப்பால் குடித்து ஏமாந்து போனவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்மை வீழ்த்தலாமென்று மனப்பால் குடிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஹற்றன் ஹெரோல் தோட்டத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மலையகத்தமிழ் மக்களின் சார்பாக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவற்றின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆதரவைத் தொடர்ந்து மலையகத்தமிழ் மக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததன் காரணமாகவே இன்று எமது தலைமைகளின் ஊடாக இந்த அரசாங்கம் மலையகத்தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கு முன்வந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தராஜபக்ஷ வெற்றிப் பெற்றிருந்தால் இன்று மலையகத்தின் நிலைமை அராஜகத்தினை நோக்கிச் சென்றிருக்கும். ஆனால் இன்று நாம் மலையகத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொண்டு சேவையாற்றத் தொடங்கியுள்ளோம்.

மலையகத் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை மீண்டும் பெற்றுள்ளோம். உரிமையுடன் கூடிய நிலத்தினையும் வீட்டினையும் பெற்றுக்கொள்வதற்கான அடித்தளத்தினை அமைத்துள்ளோம்.

ஊவாவில் தமிழ்க்கல்வி அமைச்சை மீண்டும் பெற்றுள்ளோம். இதுவரை மத்திய மாகாணத்தில் கிடைக்காத தமிழ் கல்வியமைச்சையும் விரைவில் பெற்று விடுவோம். இவையெல்லாம் மக்கள் எமது தலைமைகளிடம் காட்டிய நம்பிக்கையின் அடிப்படையிலேயே கிடைத்து வருகின்றது.அரசாங்கத்தின் 100 நாள் திட்டமென்பது அபிவிருத்தி மாத்திரமல்ல. நல்லாட்சியைப் பலப்படுத்துதற்கான நாட்களாகும்.

இந்த 100 நாள் திட்டத்தில் நல்ல பல மாற்றங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் தோட்டப்பகுதிகளில் குறுங்கால அடிப்படையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக பல வேலை திட்டங்களை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளோம்.

மலையகத்தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்மை வெற்றி பெறச்செய்வதற்கும் தற்போதைய ஆட்சியை முன்னெடுப்பதற்கும் உறுதிகொண்டுள்ளனர். எம்மை வீழ்த்துவதற்கு நினைப்பவர்கள் மக்கள் முன்னிலையில் செல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.

தோட்டப்பகுதிகளில் தமது அரசியல் தொழிற்சங்க அதிகாரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு மதுபான சாலைகளுக்கு அனுமதி பத்திரமும் அந்தச் சாலைகளுக்கான கட்டிட வசதிகளையும் கொடுத்தவர்கள் இன்று திடீரென ஞானம் பெற்றது போல மதுவொழிப்புப் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஏமாற்றத் தொடங்கியுள்ளார்கள்.

தோட்டப்பகுதிகளில் குறிப்பிட்டதொரு தொழிற்சங்கத்தின் ஆதரவுடனேயே சட்டவிரோத மினிபார்கள் இயங்கிவருகின்றன. இவற்றினை விரைவில் நாம் ஒழிப்போம்.மலையகத்தில் எந்தெந்த அரசியல்வாதியின் பெயரில் கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் விரைவில் அறிவித்து அவர்களின் முகத்திரையைக் கிழிப்போம்.

இன்று தொழிலாளர்களின் மத்தியில் காணப்படுகின்ற ஒற்றுமையை குலைப்பதற்கு சில சதிகார சக்திகள் போலி போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகி வருகின்றன.

இவற்றுக்குத் தோட்டத் தொழிலாளர்கள் துணைபோகக் கூடாது. பொது சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்ற சுயநல அரசியல்வாதிகள் யார் என்பதை தற்போது மலையகத் தமிழ் மக்கள் இனங்கண்டுள்ளதால் அவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஓரங்கட்டுவதற்கு மக்கள் உறுதிபூணவேண்டும்.

ஆசிரியர் நியமனங்கள், 16 ஆயிரம் கொடுப்பணவு: கணபதி கனகராஜ் வலியுறுத்து

பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அப்போதய அரசாங்கத்துடன் பேசியதன் விளைவாகவே 3000ம் ஆசிரிய உதவியாளர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானம் 2012ம் ஆண்டில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். தற்போதய அரசாங்கம் 2014ம் ஆண்டு வரையிலான ஆசிரியர் வெற்றிடங்களையும் கருதிற்கொண்டு இந்நியமனங்களை 6000ம் ஆக அதிகரித்து வழங்க வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரிய உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களின் பரீட்சை முடிவுகள் தற்போது பரீட்சைகள் திணைக்களத்தால் கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை முடிவுகளை நியமனங்கள் வழங்கப்படும் வரை பரீட்சார்த்திகளுக்கு அனுப்புவதில்லையென திர்மானித்திருப்பதாக அறிய முடிகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு அவர்கள் பெற்ற புள்ளிகளை நேர்முகப் பரீட்சைக்கு முன்னர் வழங்க வேண்டும். பரீட்சை முடிவுகளை உரியவர்களுக்கு வழங்காமல் நேர்முகப் பரீட்சை நடைபெற்றால் அது பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போது வழங்கவிருக்கின்ற 3000ம் ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள் 2012ம் ஆண்டு நிலவிய பெருந்தோட்ட பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடங்களை அடிப்படையாக கொண்டதே ஆகும். சில அமைச்சர்கள் இதை வைத்து 100 நாள் அரசியலில் தம்மை நிலைநிறுத்த முற்படுகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் 1900 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். அத்துடன் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆசிரியர் உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு கல்விப் பொது தராதரப் பரீட்சையில் சித்தியடைந்த முப்பதாயிரம் பேர் தேற்றியுள்ளனர்.

இவர்களில் இருந்து மேலும் பெருந்தெகையானோரை அமைச்சரவை அங்கிகாரத்துடன் புதிதாக போட்டிப் பரீட்சை நடத்தாமல் ஆசிரிய உதவியாளர்களாக சேர்த்துக்கொள்ள முடியும். இந்த காரணிகளை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது 2014ம் ஆண்டில் 6000ம் ஆசிரியர் தேவைப்பாடு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசினால் முன்மொழியப்பட்ட 3000ம் ஆசிரியர் உதவியாளர்களுக்கு மேலதிகமாக தற்போத அரசாங்கம் தனது 100நாள் வேலைத்திட்டத்தில் மேலும் 3000ம் நியமனங்களை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.

ஏற்கவே இந்த நியமனங்களை இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் அதாவது பாடசாலைகளின் முதலாம் தவணை முடிவடைவதற்கு முன்னர் வழங்குவதாக முன்னால் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானிடம் உறுதியளித்திருந்தார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் உரிய காலத்தில் இந்த நியமனத்தை வழங்கி முடிக்க வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. ஆசிரியர் உதவியாளர்களின் பயிற்சி காலத்தில் அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக 6000ம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதய அரசு தனது இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 10000ம் ரூபா அதிகரித்த கொடுப்பணவை வழங்க திர்மானித்திருக்கிறது. இந்த அதிரித்த கொடுப்பனவை பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கி அவர்களுடைய மொத்த கொடுப்பனவு மாதாந்தம் 16000ம் ரூபாவாக்கப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மலையக மக்கள் மத்தியில் ஒற்றுமை ஓங்கியுள்ளது: ஸ்ரீதரன்- தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்: கணபதி கனகராஜ்
» நாட்டில் தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்தினால் மலையக மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும்: கணபதி கனகராஜ்
» மட்டு. ஆசிரியர் இடமாற்றம் 19ற்கு முரணானது: இலங்கை ஆசிரியர் சங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum