Top posting users this month
No user |
இம்முறை கச்சதீவு செல்ல தமிழகத்தில் இருந்து 5,300 பேர் விண்ணப்பம்
Page 1 of 1
இம்முறை கச்சதீவு செல்ல தமிழகத்தில் இருந்து 5,300 பேர் விண்ணப்பம்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 5,300 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். திருவிழாவிற்கு சென்று வர அனைத்து வசதிகளையும் தமிழக அரசே செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபப்டுகின்றது.
இந்திய, இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய 2015–ம் ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் 28 மற்றும் மார்ச் மாதம் 1–ம் திகதி நடைபெறவுள்ளது.
திருவிழாவுக்கு செல்ல இதுவரை 100 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 5,300 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.
திருவிழாவிற்கு செல்லும் ஒவ்வொரு பக்தரிடமும் படகிற்கு ஒரு நபருக்கு 1000ரூபா என்றும், தனியாக 300 ரூபா விழா கமிட்டிக்கு கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் தலா ஒரு நபருக்கு 1300 ரூபா வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பலர் கண்டனம் தெரிவித்து விழா கமிட்டி பக்தர்களிடம் வசூல் செய்யக்கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய மற்றும் இலங்கை மீனவ மக்களின் ஒற்றுமைக்காகவும் இரு நாட்டு அரசுகளின் முயற்சியுடன் ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் ஏழை, வசதி படைத்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். திருவிழாவுக்காக செல்பவர்களிடம் கமிட்டி நிர்வாகம் ஒரு நபருக்கு ரூ.1300 வசூல் செய்கின்றனர். படகிற்கு ரூ.1000–ம் எனவும் விழா கமிட்டிக்கு ரூ.300 எனவும் தெரிவித்துள்ளனர்.
திருவிழாவிற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் விழா கமிட்டிக்கு எதற்காக 300 ரூபா பணம் கட்ட வேண்டும். திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்களே கொண்டு வருகின்றனர். அப்படியிருக்கும் போது கமிட்டிக்கு பக்தர்கள் எதற்காக பணம் கட்ட வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கச்சத்தீவு திருவிழாவை தமிழக அரசே ஒரு தனி அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரியிடம் முழு நிர்வாகத்தையும் ஒப்படைத்து திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் எந்த விதமான கட்டணமும் வசூல் செய்யாமல் பக்தர்கள் சென்று வருவதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை நடத்த வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை மக்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய 2015–ம் ஆண்டுக்கான திருவிழா எதிர்வரும் 28 மற்றும் மார்ச் மாதம் 1–ம் திகதி நடைபெறவுள்ளது.
திருவிழாவுக்கு செல்ல இதுவரை 100 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 5,300 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.
திருவிழாவிற்கு செல்லும் ஒவ்வொரு பக்தரிடமும் படகிற்கு ஒரு நபருக்கு 1000ரூபா என்றும், தனியாக 300 ரூபா விழா கமிட்டிக்கு கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் தலா ஒரு நபருக்கு 1300 ரூபா வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பலர் கண்டனம் தெரிவித்து விழா கமிட்டி பக்தர்களிடம் வசூல் செய்யக்கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய மற்றும் இலங்கை மீனவ மக்களின் ஒற்றுமைக்காகவும் இரு நாட்டு அரசுகளின் முயற்சியுடன் ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் ஏழை, வசதி படைத்த அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். திருவிழாவுக்காக செல்பவர்களிடம் கமிட்டி நிர்வாகம் ஒரு நபருக்கு ரூ.1300 வசூல் செய்கின்றனர். படகிற்கு ரூ.1000–ம் எனவும் விழா கமிட்டிக்கு ரூ.300 எனவும் தெரிவித்துள்ளனர்.
திருவிழாவிற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் விழா கமிட்டிக்கு எதற்காக 300 ரூபா பணம் கட்ட வேண்டும். திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவு, குடிதண்ணீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அவர்களே கொண்டு வருகின்றனர். அப்படியிருக்கும் போது கமிட்டிக்கு பக்தர்கள் எதற்காக பணம் கட்ட வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கச்சத்தீவு திருவிழாவை தமிழக அரசே ஒரு தனி அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரியிடம் முழு நிர்வாகத்தையும் ஒப்படைத்து திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் எந்த விதமான கட்டணமும் வசூல் செய்யாமல் பக்தர்கள் சென்று வருவதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை நடத்த வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum