Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

Go down

மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்! Empty மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!

Post by oviya Thu Feb 05, 2015 1:02 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகளை மீறி தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை முன்னெடுக்க முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மீது முன்னணி சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த அரசாங்கம் செய்த தவறையே புதிய அரசாங்கமும் மேற்கொண்டு வருகின்றது என கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு விசேட ஒழுங்கு விதிகளின் கீழ் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் பொலிஸ் அதிகாரங்களை முப்படையினருக்கும் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகக் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நாட்டில் சிறப்பான ஆட்சிக்கு பதிலாக இராணுவ ஆட்சியே தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இந்த வர்த்தமானி அறிவிப்பினை இரத்து செய்யாத காரணத்தினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் எதிரிகள் மாற்றுச் சிந்தனையாளர்களை அடக்கி ஒடுக்குவதற்கு கடந்த கால அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக அவசரகாலச் சட்டத்தையே பயன்படுத்தி வந்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 2011ம் ஆண்டு இந்த சட்டம் இரத்து செய்யப்பட்டது எனவும் அதற்கு பதிலாகவே பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த விசேட வர்தமானி அறிவித்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனை நீடித்திருந்தார் எனவும், இம்மாதம் 3ம் திகதி புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றில் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum