Top posting users this month
No user |
ஜனாதிபதிக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்படுவோம்: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1
ஜனாதிபதிக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்படுவோம்: எதிர்க்கட்சித் தலைவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சியினரால், நாடு முழுவதிலும் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக நாடாளுமன்றிற்கு உள்ளும் வெளியேயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை நானே வழிநடத்துவேன்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் காணப்படும் குறைகளை விமர்சனம் செய்து, அவற்றை நிவர்த்தி செய்து அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.
100 நாள் திட்டத்தை குழப்பும் எண்ணம் எமக்கு கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் இப்போது சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்த நினைத்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் மாநாயக்க தேரர்களை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.
ஐக்கிய தேசியக் கட்சியினரால், நாடு முழுவதிலும் உள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக நாடாளுமன்றிற்கு உள்ளும் வெளியேயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை நானே வழிநடத்துவேன்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் காணப்படும் குறைகளை விமர்சனம் செய்து, அவற்றை நிவர்த்தி செய்து அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.
100 நாள் திட்டத்தை குழப்பும் எண்ணம் எமக்கு கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியினர் இப்போது சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்த நினைத்தால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் மாநாயக்க தேரர்களை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum