Top posting users this month
No user |
குடியரசு தின விழா: மெரீனாவில் கொடியேற்றிய ஆளுநர்
Page 1 of 1
குடியரசு தின விழா: மெரீனாவில் கொடியேற்றிய ஆளுநர்
குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குடியரசு தின விழா நடைபெறும் சென்னை மெரீனா கடற்கரையில் கவர்னர் ரோசய்யா காலை 7.58 மணிக்கு விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்துவர காரில் வந்திறங்கினார்.
காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு இருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது விமானப்படை ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் துவியது.
அதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மத்திய மற்றும் மாநில பொலிஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.
அதன்பின், வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
நாடு முழுவதும் இன்று 66வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குடியரசு தின விழா நடைபெறும் சென்னை மெரீனா கடற்கரையில் கவர்னர் ரோசய்யா காலை 7.58 மணிக்கு விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்துவர காரில் வந்திறங்கினார்.
காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு இருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது விமானப்படை ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்தப் பகுதியில் மலர் துவியது.
அதைத் தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மத்திய மற்றும் மாநில பொலிஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.
அதன்பின், வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum