Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குடிநீரற்றுத் தவிக்கும் குடாநாடு! கழிவு எண்ணெயால் அவதியுறும் வலிகாமம்!

Go down

குடிநீரற்றுத் தவிக்கும் குடாநாடு! கழிவு எண்ணெயால் அவதியுறும் வலிகாமம்! Empty குடிநீரற்றுத் தவிக்கும் குடாநாடு! கழிவு எண்ணெயால் அவதியுறும் வலிகாமம்!

Post by oviya Mon Jan 26, 2015 11:41 am

யாழ் குடாநாடு நிலத்தடி நீர் சம்பந்தமாக, சுன்னாகம் மின்நிலையத்திலிருந்து வெளியேறி கிணறுகளில் படியும் கழிவு எண்ணெய் மற்றும் ஒட்டுமொத்தக் குடாநாட்டுக்குமான நன்னீர்ப் பிரச்சினை என இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது.
இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் வெளிவராத பல செய்திகளை கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.



சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் என்று ஆரம்பித்த கழிவு எண்ணெய் கிணறுகளில் கலக்கும் விவகாரம் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி விட்டது.

இலங்கை மின்சாரசபை ஏனைய கோபுரங்களுடன் தொடர்பில்லாத நிலையில் பார எரிஎண்ணெய் (Heavy fuel oil ) மூலம் இயக்கும் ஜெனரேற்றர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதன் கழிவு எண்ணெயை தவிர்ப்பதற்கான Oil Separator வழிமுறை பாவிக்கப்படாதே இந்த விபரீதத்திற்குக் காரணம்.

மறுபக்கமாக யாழ் குடாநாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சம் கிணறுகளில் 40 வீதமானவை உவர்நீரைக் கொண்டிருக்கின்றன.

குடாநாட்டில் நன்னீருக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இதற்கான உடனடிப் பரிகாரம் காணப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் ஆறுகள் இல்லாத ஒரு பிரதேசம். ஆனையிறவு, வடமராட்சி, அரியாலை போன்ற இடங்களில் கடல்நீரேரிகளே இருக்கின்றன. இவற்றிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்தால் இவை நன்னீராக மாறும் இதற்கான திட்டம் 1960க்களில் உருப்பெற்று பின்னர் அப்படியே இருக்கிறது.

எனவே கடலணைகளைக் கட்டுவதோடு, வவுனியாவில் ஆரம்பித்து இரணைமடுவிற்கு வரும் நீர் மீதாமாகிக் கடலுடன் கலப்பதைத் தவிர்த்து அந்த நீரையும் ஆனையிறவில் சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அவ் பகிர்ந்து கொண்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum