Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா

Go down

ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா Empty ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா

Post by oviya Sun Jan 25, 2015 12:16 pm

ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 2005–ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பெங்களூர் கோர்ட்டிலேயே மேல் முறையீடு செய்து 3 மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதன்படி ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு தொடர்பான விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆரம்பத்தில் ஆஜரான பி.பி. ஆச்சார்யா கடந்த 2012–ம் ஆண்டு ராஜினாமா செய்ததை தொடர்ந்து 2013–ம் ஆண்டு பிப்ரவரி 28–ந் தேதி பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஜெயலலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதாகவும் பவானிசிங் மீது தி.மு.க. சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து நீதிபதி குன்கா, பவானிசிங்குக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த போது, பவானிசிங் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, அரசு வழக்கறிஞர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், பவானிசிங்கே அரசு வழக்கறிஞராக தொடர அரசு ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த 23–ந் திகதி அன்று சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேறினர்.

ஆனால், பவானிசிங் மட்டும் நீண்ட நேரமாக தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. குணசீலனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜினாமா கடிதத்தில் பவானிசிங் கூறியிருப்பதாவது, தொடர் வேலைப்பளு காரணமாக உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நான், தேவையில்லாத மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன்.

எனவே ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக என்னால் நீடிக்க முடியவில்லை. அந்த பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடமும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum