Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு!

Go down

குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு! Empty குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு!

Post by oviya Sun Jan 25, 2015 12:14 pm

குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 7 பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிறையில் உள்ள கைதி ஒருவரை தாக்கியதாக அவர் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிறைக்குள் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக கைதி மாரியப்பன் என்பவரை மணிகண்டன் மரக்கட்டையால் கடந்த 18-ஆம் திகதி தாக்கியதாகவும், இந்த தாக்குதல் சுபாகர் என்ற குண்டர் சட்ட கைதியின் தூண்டுதலின் பேரில் நடந்ததாக சிறைக் கண்காணிப்பாளர் கே.ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து மணிகண்டன் சார்பில் கடந்த 20-ஆம் திகதி புகார் மனு ஒன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த புகாரில், சிறைக்குள் இருக்கும் தன்னை மாரியப்பன் என்ற சிறைவாசி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த காரணத்தால் தான் அவரை தாக்கியதாகவும், அதற்கு பிறகு சிறைகாவலர்கள் மற்றும் பிற கைதிகள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவின் பேரில் ரேஸ்கோர்ஸ் பொலிசார், மணிகண்டனை உள்நோக்குடன் தாக்கியதாக மத்திய சிறைக் காவலர்கள் 3 பேர் மற்றும் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 4 பேர் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum