Top posting users this month
No user |
கள்ளக்காதல் விவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்
Page 1 of 1
கள்ளக்காதல் விவகாரம்: மாணவர்கள் முன்னிலையில் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்
கள்ளக்காதல் விவகாரத்தால் இரு ஆசிரியர்கள் பள்ளியில் மோதிக் கொண்ட அவல சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓமலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 490 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கணித ஆசிரியராக பணியாற்றி வரும் குழந்தைவேலு என்பவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சுமதி, புகாரில் சிக்கிய இரு ஆசிரியர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்தார்.
இந்நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவலை, தலைமை ஆசிரியருக்கு அளித்ததாக கூறி அதே பள்ளியில் பணியாற்றி வரும், உடற்கல்வி ஆசிரியர் ஜெயச்சந்திரனை, நேற்று காலை பள்ளி வாளகத்துக்குள் குழந்தைவேலு தாக்கினார்.
பதிலுக்கு ஜெயச்சந்திரனும், குழந்தைவேலுவை தாக்கினார். இரு ஆசிரியர்களும் அடித்துக்கொண்டதை மாணவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தீவட்டிப்பட்டி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தீவட்டிப்பட்டி பொலிசார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், இரு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு ஆசிரியர்களும் உண்மை சம்பவங்களை மறைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் ஆசிரியர் குழந்தைவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஒரு கட்சியினர் பள்ளி வளாகத்திற்குள் பைக்கில் வந்து இறங்கினர்.
அடித்துக் கொண்ட ஆசிரியர்கள் இருவரும், வெவ்வேறு சமூகத்தவர்கள் என்பதால் ஜாதி ரீதியான மோதலாக உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு ஆசிரியர்களும் சமாதானமாக போவதாகவும், இதை பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
ஓமலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் 490 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கணித ஆசிரியராக பணியாற்றி வரும் குழந்தைவேலு என்பவருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சுமதி, புகாரில் சிக்கிய இரு ஆசிரியர்களையும் அழைத்து எச்சரிக்கை செய்தார்.
இந்நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவலை, தலைமை ஆசிரியருக்கு அளித்ததாக கூறி அதே பள்ளியில் பணியாற்றி வரும், உடற்கல்வி ஆசிரியர் ஜெயச்சந்திரனை, நேற்று காலை பள்ளி வாளகத்துக்குள் குழந்தைவேலு தாக்கினார்.
பதிலுக்கு ஜெயச்சந்திரனும், குழந்தைவேலுவை தாக்கினார். இரு ஆசிரியர்களும் அடித்துக்கொண்டதை மாணவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தீவட்டிப்பட்டி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தீவட்டிப்பட்டி பொலிசார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், இரு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு ஆசிரியர்களும் உண்மை சம்பவங்களை மறைக்க முயன்றனர். சிறிது நேரத்தில் ஆசிரியர் குழந்தைவேலுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஒரு கட்சியினர் பள்ளி வளாகத்திற்குள் பைக்கில் வந்து இறங்கினர்.
அடித்துக் கொண்ட ஆசிரியர்கள் இருவரும், வெவ்வேறு சமூகத்தவர்கள் என்பதால் ஜாதி ரீதியான மோதலாக உருவாகும் சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு ஆசிரியர்களும் சமாதானமாக போவதாகவும், இதை பெரிதுப்படுத்த வேண்டாம் எனவும் பொலிசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum