Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி

Go down

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி Empty கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு கோருவதில் தவறில்லை: அரியம் எம். பி

Post by oviya Fri Jan 23, 2015 1:52 pm

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை பெறுவதற்கான தகுதியும், மக்கள் ஆணையும் தம்மிடம் இருப்பதானாலேலே புதிய ஆட்சி மாற்றத்திற்கான கிழக்கு மாகாண சபையை சிர்வாகிப்பதற்கான முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டமைப்பு பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் எமது நியாயபூர்வமான விடயத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.கிழக்கு மாகாணசபை அமைவது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்,

மேலும் அவர் இது தொடர்பாக கருத்துக்கூறுகையில், கடந்த 2012ம் ஆண்டுத்தேர்தலில் கிழக்குமாகாணசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சிசெய்யும் பொருட்டு முதலமைச்சர் பதவியினை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க நாம் தயாராக இருந்தும் அதனை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்காமல் அப்போதைய ஐனாதிபதி மகிந்தவின் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தார்கள்.

எமது கோரிக்கை எதையும் அவர்கள் அப்போது ஏற்கவில்லை. அதற்காக நாம் கவலை அடைந்தோம். தற்போது புதிய ஐனாதிபதியாக மைத்திரிபாலசிறிசேன பதவியேற்ற பின்பு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியிலும் மாற்றம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியினை கோருவதில் என்ன பிழை இருக்கிறது. அதை மனிதநேயத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் விட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை.

மத்திய அரசாங்கத்தில் புதிய ஐனாதிபதி எமக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கவிருந்த போதும் நாம் அதை ஏற்கவில்லை காலம்காலமாக கிழக்குமாகாணத்தில் ஒன்றிணைந்து வாழும் இரு சமூகங்களும் தொடர்ந்தும் அவ்வாறே இருக்க வேண்டுமானால் இருசமூகமும் இணைந்து கிழக்கு மாகாணசபையை ஆட்சி செய்வதே பொருத்தமான நடவடிக்கையாகும்.

இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தடையாகவும் தமிழ்மக்களின் நியாயத் தன்மையை புரிந்துகொள்ளாமலும் இருப்பது தமிழ்மக்களுக்கு வேதனையளிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து பெரும்பான்மை இன உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு சிலர் எம்மிடம் வேண்டுகோள் விடுத்த போதும் நாம் அதை ஏற்கவில்லை.

காலகாலமாக கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்டு வாழும்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆட்சி செய்து ஆனந்தம் காணும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறவே இல்லை.

அந்த வரலாற்று தவறை நாம் செய்யமாட்டோம். அமைச்சுப்பதவிகளுக்காக யாரிடமும் மண்டியிடும் கட்சி எமது கட்சி இல்லை. நியாயத்தின் அடிப்படையில் தான் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கோருகிறோமே தவிர அநீதியாகவோ அன்றேல் அடிபணிந்தோ கேட்கவில்லை.

இலங்கை அரசியல் வரலாற்றில் 60 வருடங்களாக எதிர்கட்சியில் இருந்து அரசியல் செய்து பழக்கப்பட்ட நாம் முதலமைச்சர் பதவிக்காக யாரிடமும் மண்டியிடமாட்டோம். மாறாக யார் ஆட்சி அமைத்தாலும் ஆளும்தரப்புடன் ஓடிப்போய் அமைச்சுப்பதவிக்காகவும் சலுகைகளைக்காகவும் சோரம் போகும் வரலாறு எமக்கில்லை இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்காலம் பதில் சொல்லும். இப்படி கூறினார் அரியம் எம்.பி
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum