Top posting users this month
No user |
Similar topics
மகிந்த தோல்விடையவார் எனக் கூறினோம் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை: டியூ. குணசேகர
Page 1 of 1
மகிந்த தோல்விடையவார் எனக் கூறினோம் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை: டியூ. குணசேகர
உடனடியான ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றி பெற முடியும் என பலர் மகிந்த ராஜபக்ஷவிடம் கூறிய போதும் வெற்றி பெற முடியாது என தாம் நான்கு தடவைகள் மகிந்த ராஜபக்ஷவுக்கு விரிவாக தெளிவுப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் சாதக நிலைமை பற்றி அரசியல் பாடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் இதனை கூறுகிறேன்.
இடதுசாரிகளான நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறினோம்.
தேர்தலில் தோல்வியடைந்து தற்பொழுது ஆராயப்படும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை நான் மகிந்த ராஜபக்ஷவிடம் தேர்தலுக்கு முன்னரே சுமார் இரண்டு மணிநேரம் விளக்கி கூறினேன். இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன.
இரண்டு வரவு செலவுத் திட்டங்களை தாக்கல் செய்யலாம். மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன.
இனப்பிரச்சினை, தேர்தல் முறை திருத்தம், அரசியல் அமைப்புத் திருத்தம் போன்ற தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்த்து விட்டு தேர்தலுக்கு செல்லலாம் என நான் கூறினேன்.
நாங்கள் கூறியதை அவர் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
அரசியல் முடிவுகளை எடுப்பது மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் உரிமை. அரசியல் மற்றும் சமூக சக்திகள் எப்படியான நிலைமையில் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளும் திறன் தேசிய தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இதனை நான் பதிவு செய்கிறேன்.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியாமல் போனது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற முடியாது என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அவருக்கு எடுத்து கூறினேன்.
சகல சாதக பாதங்களை அடிப்படையாக கொண்டு அதனை அரசியல் ஆய்வாக நான் மேற்கொண்டேன் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் சாதக நிலைமை பற்றி அரசியல் பாடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் இதனை கூறுகிறேன்.
இடதுசாரிகளான நாங்கள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கூறினோம்.
தேர்தலில் தோல்வியடைந்து தற்பொழுது ஆராயப்படும் தேர்தல் தோல்விக்கான காரணங்களை நான் மகிந்த ராஜபக்ஷவிடம் தேர்தலுக்கு முன்னரே சுமார் இரண்டு மணிநேரம் விளக்கி கூறினேன். இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன.
இரண்டு வரவு செலவுத் திட்டங்களை தாக்கல் செய்யலாம். மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன.
இனப்பிரச்சினை, தேர்தல் முறை திருத்தம், அரசியல் அமைப்புத் திருத்தம் போன்ற தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்த்து விட்டு தேர்தலுக்கு செல்லலாம் என நான் கூறினேன்.
நாங்கள் கூறியதை அவர் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.
அரசியல் முடிவுகளை எடுப்பது மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் உரிமை. அரசியல் மற்றும் சமூக சக்திகள் எப்படியான நிலைமையில் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளும் திறன் தேசிய தலைவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இதனை நான் பதிவு செய்கிறேன்.
நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியாமல் போனது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற முடியாது என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அவருக்கு எடுத்து கூறினேன்.
சகல சாதக பாதங்களை அடிப்படையாக கொண்டு அதனை அரசியல் ஆய்வாக நான் மேற்கொண்டேன் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா அறிக்கையை விட யோசனை குறித்தே அதிக கவனம் தேவை: டியூ. குணசேகர
» தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிரான டியூ.குணசேகரவின் மனு தள்ளுபடி
» மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட
» தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிரான டியூ.குணசேகரவின் மனு தள்ளுபடி
» மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum