Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள்

Go down

நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள் Empty நள்ளிரவில் மண்ணில் புதைய தொடங்கிய கட்டிடம்: அலறியடித்து ஓடிய மக்கள்

Post by oviya Tue Jan 20, 2015 11:48 am

சென்னை ஷெனாய் நகரில் நள்ளிரவில் கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் 2 அடி இறங்கியதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
சென்னையில், திருமங்கலம் ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் முடிவடைந்ததுள்ளன.

இந்த வழித்தடத்தில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில் ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சாலையும், 8 வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென சுமார் 2 அடி அளவுக்கு பூமியில் புதைந்தது.

இதையடுத்து மாடியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.

அருகில் வீடுகளில் வசிப்பவர்களும் பூகம்பம் வந்துவிட்டதாக நினைத்து வெளியே ஓடியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்த மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன் கட்டிட சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அந்த தெருவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான கூறுகையில், இந்த வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

நான் வெளியூர் சென்றுவிட்டு, இரவு சுமார் 11.30 மணி அளவில் வீட்டுக்குள் நுழையும்போது பயங்கர சத்தம் கேட்டது. பிறகுதான் கட்டிடம் பூமிக்குள் இறங்கியது தெரிந்தது என்று தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், கட்டிடம் மண்ணுக்குள் புதைந்தது பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றும் மெட்ரோ ரயில் பணியால், அந்த கட்டிடம் சேதமடைந்திருந்தால் உரிய இழப்பீடு வழங்குவோம் அல்லது கட்டிடத்தை சரிசெய்து கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum