Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் செய்த “பிரியாணி பாபா”

Go down

ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் செய்த “பிரியாணி பாபா” Empty ஒரு கோடி ஏழைகளுக்கு பிரியாணி தானம் செய்த “பிரியாணி பாபா”

Post by oviya Tue Jan 20, 2015 11:47 am

ஆந்திராவில் “பிரியாணி பாபா’ என்றழைக்கப்படும் நபர் ஒருவர், 40 ஆண்டுகளில் தினந்தோறும் இதுவரை 1 கோடி ஏழை பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கியுள்ளார்.
விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில் அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா(78) என்ற முதியவரை மக்கள் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படும் இவரது குருவான காதர் பாபாவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார்.

இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரியாணி தயாரிக்க ‘பிரியாணி பாபா’வே களத்தில் இறங்கி பணியாற்றுகிறார்.

தினந்தோறும் இந்த இரு பகுதிகளிலும் சுமார் 1,000 ஏழைகளுக்கு பிரியாணி பரிமாறப்படுகிறது என்றும் மேலும் விசேஷ நாட்களில் 8,000 முதல் 10,000 பக்தர்கள் வரை பிரியாணி வழங்கப்படுகிறது எனவும் தெரிகிறது.

இதுகுறித்து ‘பிரியாணி பாபா’ கூறுகையில், உணவு என்பது மிக அத்தியாவசியமானது. பக்தர்கள் நன்கொடை அளிப்பதின் மூலம் பல ஏழை மக்களின் பசியை போக்க முடிகிறது. கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 1 கோடி பக்தர்களுக்கு பிரியாணியை அன்னதானமாக வழங்கியிருக்கிறோம்.

மேலும், இது தொடர வேண்டும் என்பதே என் கோரிக்கை என்றும், நான் ஜாதி, மதங்களை நம்புவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum