Top posting users this month
No user |
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
Page 1 of 1
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க நேற்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
விஜயகாந்த் கடந்த நவம்பர் 10ம் திகதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆவின் பால் கொள்முதல் நடவடிக்கையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் தமிழக அரசு இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த அறிக்கையில், தமிழக அரசு குறித்து அவதூறான கருத்துகள் உள்ளதாக, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாளை இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று செசன்சு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை .எதிர்த்து, விஜயகாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விஜயகாந்த் அறிக்கையில் பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குறித்து தனிப்பட்ட முறையிலோ, அலுவலக செயல்பாடுகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
எனவே அவதூறு வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில் கீழ்நீதிமன்றங்கள் இதே போன்ற வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள முடியாது.
எனவே விஜயகாந்த்துக்கு எதிராக சென்னை செசன்சு நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை செசன்சு நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
விஜயகாந்த் கடந்த நவம்பர் 10ம் திகதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆவின் பால் கொள்முதல் நடவடிக்கையில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் தமிழக அரசு இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த அறிக்கையில், தமிழக அரசு குறித்து அவதூறான கருத்துகள் உள்ளதாக, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாளை இந்த வழக்கு விசாரணையில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று செசன்சு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை .எதிர்த்து, விஜயகாந்த் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், விஜயகாந்த் அறிக்கையில் பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குறித்து தனிப்பட்ட முறையிலோ, அலுவலக செயல்பாடுகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் இதுகுறித்து மக்களின் சந்தேகங்களை போக்கும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
எனவே அவதூறு வழக்குகள் மீது உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில் கீழ்நீதிமன்றங்கள் இதே போன்ற வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள முடியாது.
எனவே விஜயகாந்த்துக்கு எதிராக சென்னை செசன்சு நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை செசன்சு நீதிமன்றத்தில் விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum