Top posting users this month
No user |
Similar topics
விசும்பாயவுக்கு குடிபெயரும் ஜனாதிபதி! மஹிந்தவுக்கு விஜேராம இல்லம்
Page 1 of 1
விசும்பாயவுக்கு குடிபெயரும் ஜனாதிபதி! மஹிந்தவுக்கு விஜேராம இல்லம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவிரைவில் விசும்பாய இல்லத்திற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால தற்போது கொழும்பு -07 விஜேராமையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றில் வசித்து வருகின்றார்.
அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீடு அவருக்கு போதுமானதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் தங்கிக் கொள்வதற்கான வசதிகள் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் போதுமானதாக இல்லை.
எனவே அவர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பாயவுக்கு குடிபெயர தீர்மானித்துள்ளார்.
இந்த ஆடம்பர மாளிகை முன்னர் கே.பி. எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் தங்கியிருந்த மாளிகையாகும்.
எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசும்பாயவிற்கு குடிபெயரத் தீர்மானித்துள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி தற்போது வசிக்கும் விஜேராம இல்லம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக ஸ்டென்மோ கிரசண்ட் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
குறித்த வீடு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அந்த வீட்டை மஹிந்தவுக்கு வழங்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாகவே விஜேராம வீடு மஹிந்தவுக்கு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால தற்போது கொழும்பு -07 விஜேராமையில் உள்ள அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றில் வசித்து வருகின்றார்.
அமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வீடு அவருக்கு போதுமானதாக இருந்தது.
இந்நிலையில் தற்போது ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் தங்கிக் கொள்வதற்கான வசதிகள் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் போதுமானதாக இல்லை.
எனவே அவர் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பாயவுக்கு குடிபெயர தீர்மானித்துள்ளார்.
இந்த ஆடம்பர மாளிகை முன்னர் கே.பி. எனப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் தங்கியிருந்த மாளிகையாகும்.
எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசும்பாயவிற்கு குடிபெயரத் தீர்மானித்துள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி தற்போது வசிக்கும் விஜேராம இல்லம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக ஸ்டென்மோ கிரசண்ட் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
குறித்த வீடு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் தற்போது அந்த வீட்டை மஹிந்தவுக்கு வழங்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாகவே விஜேராம வீடு மஹிந்தவுக்கு வழங்கப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க ஜனாதிபதி இணக்கம்: டீ.பீ.ஏக்கநாயக்க
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
» சி.பி.ரட்னாயக்க மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு?
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான விசாரணை நாளைவரை ஒத்திவைப்பு
» சி.பி.ரட்னாயக்க மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum