Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறும்: மங்கள

Go down

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறும்: மங்கள Empty இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை இடம்பெறும்: மங்கள

Post by oviya Tue Jan 20, 2015 11:18 am

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் மக்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஆதரவுடன் உள்நாட்டு பொறிமுறையொன்றை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்வது குறித்து புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை இந்தியா ஆதரிக்கும் என எதிர்பார்பாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் 18வது திருத்தத்தை நீக்குவதன் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து எச்சரிக்கையான விதத்தில் பதிலளித்துள்ள அவர், தமிழ் மக்களின் நிலங்கள் அவர்களிடமே ஓப்படைக்கப்படும், ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை இலங்கை பாணி அரேபிய வசந்தம் என குறிப்பிட்டுள்ள அவர், ஆட்சி மாற்றம் வெளியுலகிற்கு தென்படுகின்ற மாதிரி இலகுவானதாக அமையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்வதன் மூலமாக சதிப்புரட்சி முயற்சிக்கு முயன்றார். எனினும் எமது படையினர் எம்முடன் இருந்தனர்.

அன்றைய இரவு குறித்து முழுமையான விசாரணைகள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம் தனது அயல்நாட்டுடன் நட்புறவை மீள ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum