Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தெரியாத தேவதை மைத்திரியினால் தமிழர்களுடன் இணக்கத்தை எட்ட பாரிய சவால்கள் காத்திருக்கின்றன: எரிக் சொல்ஹெய்ம்

Go down

தெரியாத தேவதை மைத்திரியினால் தமிழர்களுடன் இணக்கத்தை எட்ட பாரிய சவால்கள் காத்திருக்கின்றன: எரிக் சொல்ஹெய்ம் Empty தெரியாத தேவதை மைத்திரியினால் தமிழர்களுடன் இணக்கத்தை எட்ட பாரிய சவால்கள் காத்திருக்கின்றன: எரிக் சொல்ஹெய்ம்

Post by oviya Thu Jan 15, 2015 1:27 pm

தெரியாத தேவதையால் இலங்கையின் தமிழர்கள் தொடர்பிலான இனப்பிரச்சினை தீர்வின்போது பாரிய சவால்களை எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதரும் அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்: இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் யாழ்ப்பாண மக்களுக்கு தெரிந்த பேய் என்றும் மைத்திரிபால தெரியாத தேவதை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே தெரியாத தேவதையை காட்டிலும் தெரிந்தபேயான தமக்கு வாக்களிக்குமாறு அவர் கோரியிருந்தார்.

இந்தநிலையில் இதனை கோடிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் சிங்கள பௌத்த வாக்காளர் மத்தியில் மஹிந்த ராஜபக்ச அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.

எனினும் மைத்திரிபால சிறிசேன தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

இந்தநிலையில் பௌத்தவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய அவரின் இணை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இனப்பிரச்சினை தீர்வைக்காண்பதில் பாரிய சவால் உள்ளது என்று சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கதிருந்திருந்தால் தேர்தலில் மைத்திரிபால வெற்றிப்பெற்றிருக்கமுடியாது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரங்கள் இந்த தேர்தலின்மூலம் ரத்துச்செய்யப்பட்டுள்ளமையால் இனி இலங்கையின் செய்தியாளர்கள் ஒரே இரவில் காணாமல் போகமாட்டார்கள் அவர்கள் சுதந்திரமாக எழுதமுடியும் என்றும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மைத்திரிபாலவை இந்தியா விருந்தினராக அழைத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானபோது எந்தநாடும் அவரை அழைக்கவில்லை. எனினும் மைத்திரிபாலவுக்கு இந்தியா அந்த கௌரவத்தை வழங்கியிருக்கிறது.

அத்துடன் மைத்திரியோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவோ விரைவில் வெள்ளை மாளிகைக்கும் ஐரோப்பாவுக்கும் விஜயம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum