Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி

Go down

டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி Empty டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி

Post by oviya Mon Jan 12, 2015 1:17 pm

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான மூன்று எம்.பிக்கள் இ.தொ.கவின் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) போன்றோரை புதிய அரசுக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அரசுக்கு வெளியில் இருந்து அவர்கள் வழங்கக் கூடிய ஆதரவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் புதிய பிரதமர் தீர்மானித்திருக்கிறார் என கொழும்பு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன

மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவரும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை வகித்தவருமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி இணைத்து கொண்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்க கருணாவின் விருப்பமும் தேவையாக இருந்தது. இதன் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருணா தொடர்பாக விசேட கவனத்தை செலுத்தியதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வீட்டில் மேலும் சில எம்.பிக்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன, ரஞ்சித் சிம்பலாப்பிட்டிய. ஜோன் செனவிரட்ன மற்றும் உதித்த லொக்குபண்டார ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவ வழங்க முன்வந்துள்ளனர்.

இதனிடையே சஜின்வாஸ் குணவர்தன உதித்த லொக்குபண்டார, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரை அரசாங்கத்திற்குள் இணைப்பது தொடர்பில் சரத் பொன்சேகா மற்றும் ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் சஜின் வாஸ் குணவர்தன, ராஜபக்ஷவினருக்கு மிக நெருக்கமான நபர் என்பதுடன் மகிந்த அரசாங்கத்தில் பலமிக்க நபராக இருந்து வந்தார். அதேவேளை உதித்த லொக்குபண்டார, மகிந்த அரசாங்கத்தின் கீழ் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஹரின் பெர்ணான்டோவுக்கு எதிராக செயற்பட்டார்.

அத்துடன் நாமல் ராஜபக்ஷவின் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இதன் காரணமாக ஹரின் பெர்ணான்டோ தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வெற்றி பெற காரணமானவர்களில் ஹரின் பெர்ணான்டோ முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum