Top posting users this month
No user |
மக்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது!
Page 1 of 1
மக்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு மஹிந்த பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்கது!
7வது ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதனால் 51.28 வீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ளதுடன் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த தேர்தலிலும் இலகுவாக வெற்றியீட்ட முடியும் என்று எண்ணியே அவர் இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பினை விடுத்திருந்தார்.
2005ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலின் போதும் இரு வேட்பாளர்களுக்குமிடையில் கடும் போட்டி நிலவியது.
இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை வாக்களிப்பதற்கு விடுதலைப் புலிகள் தடை விதித்திருந்தனர். இதன் காரணத்தினால் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவாகியிருந்தார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டில் சிங்கள மக்கள் யுத்த வெற்றிக்களிப்பில் இருந்தனர். இதனால் இலகுவாகவே ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 2011ம் ஆண்டு அமுலில் இருந்த 17வது திருத்தச் சட்டத்தினை இல்லாது ஒழித்து 18 வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்ததன் மூலம் ஒருவர் எத்தனை தரம் வேண்டுமானாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலை உருவானது. இதற்கிணங்கவே இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டிருந்தார்.
இத்தேர்தலில் தனக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மஹிந்த ராஜபக்சவிடம் காணப்பட்டது.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறி பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கனவிலும் நினைத்திருக்கவில்லை.
பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தன.
இதனைவிட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளரை ஆதரித்திருந்தது.
உண்மையிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகித்த சிறுபான்மை கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கான முடிவை எடுத்தமைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் தமது உயிர்களையும், உடமைகளையும் இழந்து பேரவலத்திற்கு உள்ளாகினர்.
இவ்வாறு நிர்க்கதியான தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது பெரும் கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்புக்களும் திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெற்றன.
தமிழர்களது இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகளும் இடம்பெற்று வந்தன. அதி பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படைத்தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணிகள் மீளவும் பொது மக்களிடம் வழங்கப்படவில்லை. வலிகாமம் வடக்கில் 6300 ஏக்கர் பொது மக்களின் காணிகள், சுவீகரிக்கப்பட்டன.
இதனை விட வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட போதும் அந்த மாகாண சபை நிர்வாகத்தை கூட்டமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டன.
வடமாகாண ஆளுநராக பதவி வகிக்கும் படைத்தரப்பு அதிகாரியை நீக்கி அவரது இடத்திற்கு சிவில் நிர்வாக அதிகாரியை நியமிக்குமாறும் வடமாகாண சபையின் பிரதம செயலாளராகப் புதியவரை நியமிக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கூட்டமைப்பினரது இந்தக் கோரிக்களை நிறைவேற்றாத அரசாங்கம் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வந்தது.
30 வருட கால யுத்தத்திற்கு காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையினை முறித்துக் கொண்ட அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து விட்டு அந்தக் குழுவிற்கு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று கூறுகின்றது.
இவ்வாறு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் விடயத்தில் இழுத்தடிப்புப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனாலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டு எதிரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகளும் எதிரணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாய சூழலை முஸ்லிம் மக்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
கடந்த சில வருடங்களாகவே முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்து கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தாக்குதல்கள் தொடர்ந்தன. ஹலால் சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் பூதாகரமாக்கப்பட்டு அந்த நடைமுறையும் மாற்றியமைக்கப்பட்டது. மாடு அறுக்கும் விவகாரத்திலும் கூட பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.
திட்டமிட்ட வகையில் பொதுபல சேனா, இராவண பலய போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதன் உச்சக்கட்டமாக தர்கா நகர், பேருவளை, அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாகும் நிலை உருவாகியிருந்தது.
இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூகமே அதிருப்தி கொள்ளும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிரணியின் பக்கம் சென்று ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருந்தது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள பகுதிகளில் கணிசமான வாக்குக்கள் கிடைத்தே உள்ளன. பெருமளவான தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றே இருக்கின்றார்.
ஆனால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். இந்தத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளே எதிரணி வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இழைத்த தவறுகளே காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்தத் தேர்தல் பெறுபேறானது பேரினவாத சக்திகளுக்கு ஒரு படிப்பினையாகவே அமைந்திருக்கின்றது.
ஆனாலும், மக்களின் தீர்ப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகும். நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்கு இவரது இந்த செயற்பாடு வழிவகுத்துள்ளது.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ளதுடன் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் தனது மூன்றாவது பதவிக்காலத்திற்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்த தேர்தலிலும் இலகுவாக வெற்றியீட்ட முடியும் என்று எண்ணியே அவர் இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பினை விடுத்திருந்தார்.
2005ம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலின் போதும் இரு வேட்பாளர்களுக்குமிடையில் கடும் போட்டி நிலவியது.
இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை வாக்களிப்பதற்கு விடுதலைப் புலிகள் தடை விதித்திருந்தனர். இதன் காரணத்தினால் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவாகியிருந்தார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டில் சிங்கள மக்கள் யுத்த வெற்றிக்களிப்பில் இருந்தனர். இதனால் இலகுவாகவே ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 2011ம் ஆண்டு அமுலில் இருந்த 17வது திருத்தச் சட்டத்தினை இல்லாது ஒழித்து 18 வது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்ததன் மூலம் ஒருவர் எத்தனை தரம் வேண்டுமானாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலை உருவானது. இதற்கிணங்கவே இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச போட்டியிட்டிருந்தார்.
இத்தேர்தலில் தனக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மஹிந்த ராஜபக்சவிடம் காணப்பட்டது.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும், சுகாதார அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறி பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கனவிலும் நினைத்திருக்கவில்லை.
பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டதையடுத்து அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தன.
இதனைவிட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளரை ஆதரித்திருந்தது.
உண்மையிலேயே அரசாங்கத்தில் அங்கம் வகித்த சிறுபான்மை கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கான முடிவை எடுத்தமைக்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் தமது உயிர்களையும், உடமைகளையும் இழந்து பேரவலத்திற்கு உள்ளாகினர்.
இவ்வாறு நிர்க்கதியான தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது பெரும் கஷ்டப்பட்டனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்புக்களும் திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெற்றன.
தமிழர்களது இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட செயற்பாடுகளும் இடம்பெற்று வந்தன. அதி பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் படைத்தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணிகள் மீளவும் பொது மக்களிடம் வழங்கப்படவில்லை. வலிகாமம் வடக்கில் 6300 ஏக்கர் பொது மக்களின் காணிகள், சுவீகரிக்கப்பட்டன.
இதனை விட வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட போதும் அந்த மாகாண சபை நிர்வாகத்தை கூட்டமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டன.
வடமாகாண ஆளுநராக பதவி வகிக்கும் படைத்தரப்பு அதிகாரியை நீக்கி அவரது இடத்திற்கு சிவில் நிர்வாக அதிகாரியை நியமிக்குமாறும் வடமாகாண சபையின் பிரதம செயலாளராகப் புதியவரை நியமிக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கூட்டமைப்பினரது இந்தக் கோரிக்களை நிறைவேற்றாத அரசாங்கம் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வந்தது.
30 வருட கால யுத்தத்திற்கு காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையினை முறித்துக் கொண்ட அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்து விட்டு அந்தக் குழுவிற்கு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்று கூறுகின்றது.
இவ்வாறு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணும் விடயத்தில் இழுத்தடிப்புப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனாலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டு எதிரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.
இதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகளும் எதிரணி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாய சூழலை முஸ்லிம் மக்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
கடந்த சில வருடங்களாகவே முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்து கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் வரை தாக்குதல்கள் தொடர்ந்தன. ஹலால் சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் பூதாகரமாக்கப்பட்டு அந்த நடைமுறையும் மாற்றியமைக்கப்பட்டது. மாடு அறுக்கும் விவகாரத்திலும் கூட பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.
திட்டமிட்ட வகையில் பொதுபல சேனா, இராவண பலய போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இதன் உச்சக்கட்டமாக தர்கா நகர், பேருவளை, அளுத்கம பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் முஸ்லிம் மக்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாகும் நிலை உருவாகியிருந்தது.
இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூகமே அதிருப்தி கொள்ளும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதிரணியின் பக்கம் சென்று ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயத் தேவை எழுந்திருந்தது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள பகுதிகளில் கணிசமான வாக்குக்கள் கிடைத்தே உள்ளன. பெருமளவான தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றே இருக்கின்றார்.
ஆனால் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார். இந்தத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளே எதிரணி வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இழைத்த தவறுகளே காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்தத் தேர்தல் பெறுபேறானது பேரினவாத சக்திகளுக்கு ஒரு படிப்பினையாகவே அமைந்திருக்கின்றது.
ஆனாலும், மக்களின் தீர்ப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவி விலகியுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகும். நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்கு இவரது இந்த செயற்பாடு வழிவகுத்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum