Top posting users this month
No user |
கல்குடாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் வீட்டிற்கு கூட்டமைப்பினர் விஜயம்
Page 1 of 1
கல்குடாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் வீட்டிற்கு கூட்டமைப்பினர் விஜயம்
கல்குடா பொலிஸ் பிரிவில் உள்ள பேத்தாழை கருங்காலிச்சோலையில் முச்சக்கர வண்டியொன்று தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான செ.ஈவேரா என்பவரது வீட்டிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
சம்பவத்தினை பார்வையிட்டவர்கள் கல்குடா பொலிசாருடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கும் படி பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தனர்.
இதேவேளை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியை பொறுக்க முடியாத தீய சக்திகள் தங்களது இயலாமையின் வெளிப்படாகவே இறுதி ஆயுதமான நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று இதன்போது தெரிவித்தனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணப்பிள்ளை, இரா.துரைரெட்ணம் ஆகியோர்கள் மற்றும் ஆதரவாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
சம்பவத்தினை பார்வையிட்டவர்கள் கல்குடா பொலிசாருடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கும் படி பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தனர்.
இதேவேளை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றியை பொறுக்க முடியாத தீய சக்திகள் தங்களது இயலாமையின் வெளிப்படாகவே இறுதி ஆயுதமான நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று இதன்போது தெரிவித்தனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம், மா.நடராசா, ஞா.கிருஷ்ணப்பிள்ளை, இரா.துரைரெட்ணம் ஆகியோர்கள் மற்றும் ஆதரவாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum