Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி

Go down

நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி Empty நான் பெண் சிங்கம்….என்னை உலகுக்கே தெரியும்: குஷ்புவின் பதிலடி

Post by oviya Mon Jan 05, 2015 1:58 pm

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, நான் ஒரு பெண்சிங்கம் என்னை உலகுக்கே தெரியும் என்று தடாலடியாக பேசியுள்ளார்.
கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவை ஜேம்ஸ் தலைமை தாங்கினார்.

நடிகை குஷ்பு சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டில் பால்விலை, மின்சாரக்கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது.

மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. பா.ஜனதா கட்சி தலைவர்கள் நாட்டின் மத, இன ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களைத்தான் கூறி வருகிறார்கள்.

பகவத்கீதையை தேசிய நூலாக்க வேண்டும், சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும், மற்ற மதத்தினர் பண்டிகைகளை கொண்டாடாமல் தடுக்க வேண்டும் என்பதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பினால் ஆளும் பா.ஜனதா மந்திரிகள் மன்னிப்பு கேட்கிறார்கள். பாராளுமன்றம் பாவ மன்னிப்பு கேட்கும் இடமாகி விட்டது.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார்.

யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக்கிறேன். நடிகை–நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக்கிறார்கள்.

பா.ஜனதா ஆளும் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானி நடிகை இல்லையா? மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ரஜினியை சந்திக்கவில்லையா?

அவரை கட்சிக்கு இழுக்க தமிழக பா.ஜனதா கட்சி முயற்சி செய்தது ஏன்? சமீபத்தில் சென்னை வந்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா நடிகர் நெப்போலியன், இயக்குனர்–இசை அமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோரை கட்சியில் சேர்க்கவில்லையா? நடிகர்–நடிகைகளை கட்சியில் வைத்திருக்கும் இவர்கள் என்னை விமர்சிப்பதா?

நடிகையாக இருப்பவர் ஒரு கட்சியின் தொண்டராக இருந்து பணிபுரிவதில் என்ன தவறு இருக்கிறது? என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் கூறி இருக்கிறார்.

என்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுக்குமே தெரியும்.

பாம்பு என்றால் சண்டை போடலாம். பல்லி என்றால் தள்ளி விடலாம். நான் அப்படி அல்ல. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிரியா? உண்மையாகவே அவர் என்னை பார்த்து பயந்து விட்டார். நான் காக்கை அல்ல, பெண் சிங்கம்.

நான் தமிழக காங்கிரஸ் கட்சியை வளர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவேன். 2016–ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். கை தான் நமக்கு நம்பிக்கை என்று பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum