Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!

Go down

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி! Empty வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!

Post by oviya Sun Jan 04, 2015 10:55 am

வடகிழக்கு மாகாணங்களில் பல உதவிகளை செய்யும் அன்பே சிவம் அமைப்பானது, அம்பாறை மாவட்ட மக்களது துன்பதுயரங்களிலும் பங்கெடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவது பாராட்டத்தக்கவிடயமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அருள் மிகு சுவிஸ் சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ் சங்கம் ,சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம், சொலத்தூண் மக்கள் இணைந்து அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அம்மக்களுக்கான நிவாரணங்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினரூடாக வழங்கி வைத்தார்கள்.

அதனை ஏற்றுக்கொண்ட கி.மா சபை உறுப்பினர், அம்பாறை மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களுக்கு ஒரேநாளில் உலர் உணவு பொருட்ளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், வி.கமலதாசன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் பாஸ்கரன், பா.புவிராஜ், மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய த.கலையரசன்,

எமது மாவட்டத்திலே அண்மையில் பெய்த கன மழை காரணமாக அனைத்து தாழ் நிலப்பிரதேசங்களும் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

அதன் காரணமாக அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்திருந்தார்கள். இதனை கருத்தில் கொண்ட புலம் பெயர் அமைப்புக்கள் பல இந்த மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு உடனடி நிவாரணங்களை அங்குள்ள எமது உறவுகளிடம் பெற்று இங்குள்ள மக்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அதனடிப்படையில் அன்பே சிவம் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 இலட்சம் ரூபாயினை அனுப்பிவைத்து மக்களின் குறைபாடுகளை ஓரளவு தீர்த்து வைத்தார்கள். இவர்கள் அந்த நிதியினை மிகவும் கஸ்டத்தின் மத்தியில் புலம்பெயர் மக்களிடம் சென்று பெற்றே அதனை அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

அவர்களால் அனுப்பப்படும் அந்த தொகையினை நாங்கள் உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டியது எங்களது கடமையாகும். அதற்கிணங்க உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை பெற்று வழங்கி வருகின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் எமக்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டு வரும் மக்களை இந்த இடத்தில் நினைவு கோருவது மிக முக்கியமான விடயமாகும்.

இன்று இந்த நாட்டிலே தேர்தல் காலம் என்பதனால் நாங்கள் தேர்தல் நோக்கம் கருதி இதனை மக்களுக்கு கொடுக்கின்றோம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. காரணம் எங்கள் மக்கள் நிவாரணங்களுக்காக வாக்குப்பலத்தினை பிரயோகிப்பவர்கள் அல்ல. அவர்கள் தன்மானத்திற்காகவும் உரிமைக்காகவும் என்று அவர்களது வாக்குப்பலத்தினை பிரயோகிப்பவர்கள் என்பதனை உரியவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு தமிழ்மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றி எமது கட்சித்தலமை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டும் எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எமது மக்கள் செயற்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை எனவும் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum