Top posting users this month
No user |
Similar topics
வாழைக்காய் பால் குழம்பு
Page 1 of 1
வாழைக்காய் பால் குழம்பு
தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.
கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.
வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.
காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
You might also like:
காஞ்சிபுரம் இட்லி
இரு புளிக்குழம்பு
ரஜ்மா பகோடா
Linkwithin
Posted by Kamala 3 மறுமொழி இணைக்க
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
பால் அல்வா
தேவையானப்பொருட்கள்:
பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்
செய்முறை:
மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.
இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.
வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.
கடையில் கிடைக்கும் தேங்காய்ப்பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம்.
வாழைக்காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும். பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும். தேவை பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக்கவும்.
காய் மூழ்கும் அளவிற்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும். மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடவம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
You might also like:
காஞ்சிபுரம் இட்லி
இரு புளிக்குழம்பு
ரஜ்மா பகோடா
Linkwithin
Posted by Kamala 3 மறுமொழி இணைக்க
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Twitter இல் பகிர்
Facebook இல் பகிர்
Pinterest இல் பகிர்
பால் அல்வா
தேவையானப்பொருட்கள்:
பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1/2 கப்
ரவா - 1/4 கப்
செய்முறை:
மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.
இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum