Top posting users this month
No user |
மசால் வடை
Page 1 of 1
மசால் வடை
தேவையானப்பொருட்கள்:
கடலைப்பருப்பு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு நன்றாக ஊறியவுடன், அதை கழுவி, நீரை ஒட்ட வடித்து விடவும். ஒரு கையளவு ஊறிய பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளதை, சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். அத்துடன், தனியாக எடுத்து வைத்துள்ள ஊறிய கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துருவலைப் போட்டு நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, அதற்கு பதில் சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம். வடையில் சற்று காரம் தூக்கலாக வேண்டுமென்றால், பருப்பை அரைக்கும் பொழுது ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைக்கலாம். சிறிது புதினா, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்தால், வடை புதினா வாசனையுடன் இருக்கும்.
கடலைப்பருப்பு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு நன்றாக ஊறியவுடன், அதை கழுவி, நீரை ஒட்ட வடித்து விடவும். ஒரு கையளவு ஊறிய பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளதை, சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். அத்துடன், தனியாக எடுத்து வைத்துள்ள ஊறிய கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துருவலைப் போட்டு நன்றாகப் பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, அதற்கு பதில் சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம். வடையில் சற்று காரம் தூக்கலாக வேண்டுமென்றால், பருப்பை அரைக்கும் பொழுது ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைக்கலாம். சிறிது புதினா, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்தால், வடை புதினா வாசனையுடன் இருக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum