Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் உயிர் பெறும் சென்னை நகரம்! போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்! மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு! இலவச பஸ் பயணம்
Page 1 of 1
மீண்டும் உயிர் பெறும் சென்னை நகரம்! போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்! மருத்துவ முகாம்கள் அதிகரிப்பு! இலவச பஸ் பயணம்
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக முழு சென்னையும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக தடைப்பட்டது.
எனினும் தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதால், சென்னை நகரம் இயல்பு நிலைக்கு திருப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து விதமான போக்குவரத்துகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளநீர் வடிந்துள்ளதால் நாளை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்றும் இந்திய விமான நிலையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விமான நிலையம் காலை 6 மணி முதல் இயற்கை வெளிச்சம் இருக்கும் வரை இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சென்னையில் தொலைத் தொடர்பு சேவையானது ஒரிரு நாட்களில் சீரடையும் என்று தமிழக தலைமை செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் குறித்து நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தொலைத் தொடர்பு சேவை நிறுவங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சென்னையில் தொலைத் தொடர்பு சேவையானது ஒரிரு நாட்களில் சீரடையும் என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
தாம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலர் தகவல் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், மியாட் மருத்துவமனையில் நோயாளிகள் இறப்பு விவரம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியும். தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையில் உள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்பட்டாலும் வழங்கப்படும்.
201 மருத்துவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 24 மணிநேரமும் சிக்கையளித்து வருகின்றனர்.
பாம்புக்கடி உள்பட அத்தியாவசிய தேவைக்கான மருந்து பொருட்கள் போதுமான அளவு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1,100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது
92 நடமாடும் மருத்துவ முகாம்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. 18.12 லட்சம் பேர் மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை பெற்று உள்ளனர்.
30.61 லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு உள்ளது. என்றும் சுகாதாரத் துறை செயலர் தகவல் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அத்துடன் நாளை முதல் சென்னை மாநகர பேருந்துகளில் 8-ம் திகதி வரையில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள மக்கள் போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
இதுவன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே தங்கி உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் இந்தத் தருவாயில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். எனவே, இதற்கு ஏதுவாக 5.12.2015 முதல் 8.12.2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.
இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதால், சென்னை நகரம் இயல்பு நிலைக்கு திருப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக தடைப்பட்டிருந்த அனைத்து விதமான போக்குவரத்துகளும் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் நாளை முதல் பகுதி நேரமாக செயல்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான நிலையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளநீர் வடிந்துள்ளதால் நாளை முதல் பகுதி நேரமாக சென்னை விமான நிலையம் செயல்படும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்றும் இந்திய விமான நிலையத் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விமான நிலையம் காலை 6 மணி முதல் இயற்கை வெளிச்சம் இருக்கும் வரை இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சென்னையில் தொலைத் தொடர்பு சேவையானது ஒரிரு நாட்களில் சீரடையும் என்று தமிழக தலைமை செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் குறித்து நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
தொலைத் தொடர்பு சேவை நிறுவங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சென்னையில் தொலைத் தொடர்பு சேவையானது ஒரிரு நாட்களில் சீரடையும் என்றும் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
தாம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் மீட்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத் துறை செயலர் தகவல் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், மியாட் மருத்துவமனையில் நோயாளிகள் இறப்பு விவரம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியும். தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையில் உள்ளது.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்பட்டாலும் வழங்கப்படும்.
201 மருத்துவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 24 மணிநேரமும் சிக்கையளித்து வருகின்றனர்.
பாம்புக்கடி உள்பட அத்தியாவசிய தேவைக்கான மருந்து பொருட்கள் போதுமான அளவு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1,100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது
92 நடமாடும் மருத்துவ முகாம்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. 18.12 லட்சம் பேர் மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை பெற்று உள்ளனர்.
30.61 லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு உள்ளது. என்றும் சுகாதாரத் துறை செயலர் தகவல் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அத்துடன் நாளை முதல் சென்னை மாநகர பேருந்துகளில் 8-ம் திகதி வரையில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்பு அடைந்துள்ள மக்கள் போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக வெள்ளப் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
இதுவன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே தங்கி உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் இந்தத் தருவாயில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும். எனவே, இதற்கு ஏதுவாக 5.12.2015 முதல் 8.12.2015 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என உத்தரவிட்டுள்ளேன்.
இந்த நான்கு நாட்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலவச பெட்ரோல்: மனித நேயத்தில் நெகிழ வைக்கும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி
» பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
» முழங்காவிலில் பேருந்து நிலையம் அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: வடக்கு போக்குவரத்து அமைச்சர்
» பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
» முழங்காவிலில் பேருந்து நிலையம் அமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்: வடக்கு போக்குவரத்து அமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum