Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Go down

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Empty ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Post by oviya Wed Dec 02, 2015 2:26 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் கொலையாளிகளான சாத்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 15 பேரின் தண்டனையை குறைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எச்.எல்.தத்து, இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு குறித்து அவர் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கைத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சபேர், யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு சார்பில் வழக்குரைஞர் ரஞ்சித் குமார், குற்றவாளிகளில் ஒருவரான முருகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, தமிழ அரசு சார்பில் ராகேஷ் துவிவேதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 11 நாள்கள் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகளை விடுவிடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சார்பில் எல்.எல் தத்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum