Top posting users this month
No user |
Similar topics
மோர் குழம்பு
Page 1 of 1
மோர் குழம்பு
தேவையான பொருள்கள்:-
புளித்த தயிர் – 1கப்
தேங்காய் துருவல் – 1/4கப்
சீரகம் – 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
துவரம் பருப்பு – 1ஸ்பூன்
பச்சரிசி – 1ஸ்பூன்
வெள்ளரிக்காய் – 1கப் பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 1/4 கப் பொடியாக நறுக்கியது
தக்காளி – 1/4கப் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து
பச்சை மிளகாய்- 1நம்பர் பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி தழை – 1/4கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு – 2ஸ்பூன்
வரமிளகாய் – 3 நம்பர்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் துவரம் பருப்பையும் பச்சரிசியையும் 1மணி நேரம் ஊறவைத்து நெறு நெறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து மைப்போல அரைத்துக் கொள்ளவும்.
தயிரையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மைப்போல் அரைத்த கலவையையும் உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு கடைந்த தயிரையும் நெறு நெறுப்பாக அரைத்தையும் சேர்த்து முறைத்து வருவதற்குள் அடுப்பை அணைத்து மேலாக கொத்தமல்லி தழையை தூவி மூடி வைக்கவும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்கு வறுத்து அதில் கொட்டி தேவைப்படும் போது பரிமாறவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
புளித்த தயிர் – 1கப்
தேங்காய் துருவல் – 1/4கப்
சீரகம் – 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2ஸ்பூன்
துவரம் பருப்பு – 1ஸ்பூன்
பச்சரிசி – 1ஸ்பூன்
வெள்ளரிக்காய் – 1கப் பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 1/4 கப் பொடியாக நறுக்கியது
தக்காளி – 1/4கப் பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை – 1கொத்து
பச்சை மிளகாய்- 1நம்பர் பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி தழை – 1/4கப் பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு – 2ஸ்பூன்
வரமிளகாய் – 3 நம்பர்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் துவரம் பருப்பையும் பச்சரிசியையும் 1மணி நேரம் ஊறவைத்து நெறு நெறுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து மைப்போல அரைத்துக் கொள்ளவும்.
தயிரையும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் மைப்போல் அரைத்த கலவையையும் உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு கடைந்த தயிரையும் நெறு நெறுப்பாக அரைத்தையும் சேர்த்து முறைத்து வருவதற்குள் அடுப்பை அணைத்து மேலாக கொத்தமல்லி தழையை தூவி மூடி வைக்கவும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்கு வறுத்து அதில் கொட்டி தேவைப்படும் போது பரிமாறவும்.
சுவையான மோர் குழம்பு தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum