Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விநாயகர் சதுர்த்தி பட்சணம்

Go down

விநாயகர் சதுர்த்தி பட்சணம் Empty விநாயகர் சதுர்த்தி பட்சணம்

Post by oviya Wed Nov 25, 2015 8:29 am

மாவு ஒன்று… கொழுக்கட்டை பல:

புதினா கொழுக்கட்டை என்றில்லை எந்தக் கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்றாலும் கொழுக்கட்டை செய்ய மாவு அவசியம். இதற்கு நன்கு ஊற வைக்கப்பட்டு களைந்து உலர்த்தப்பட்டு அரைக்கப்பட்ட பச்சரிசி மாவை துணியில் மூட்டை கட்டி ஆவியில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதை நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்ததை கட்டியில்லாமல் மிக்ஸியில் மாவாக்க வேண்டும். அந்த மாவை எந்தக் கொழுக்கட்டை செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதினா கொழுக்கட்டை செய்யலாம்!

புதினா 1 கப் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவுக்குக் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொண்டு அதில் அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றுடன் கொதிக்கும் நீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். எண்ணெயில் கடுகு, உளுந்து பெருங்காயம் தாளித்து பிசைந்த மாவில் கொட்டி சிறு சிறு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்க வேண்டும். இப்போது சுவையான புதினாக் கொழுக்கட்டை தயார்.

பூரணங்கள் செய்வது எப்படி?

கொள்ளுப் பூரணம்:

வழக்கமாக பூரணம் செய்ய எள், தேங்காயைப் பயன்படுத்தலாம். அல்லது கொள்ளை வறுத்து நன்கு வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு அதை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து பூரணமாகப் பயன்படுத்தலாம். கொள்ளுவிற்குப் பதிலாக,பாசிப் பருப்பு, காராமணி போன்றவற்றையும் வேக வைத்துப் பூரணம் செய்யலாம்.

பனீர் பூரணம்:

பனீர் 250 கிராம் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலம், சர்க்கரைப் பவுடர், முந்திரி, திராட்சை பொடித்து எல்லாவற்றையும் பூரணமாகப் பயன்படுத்தலாம்.

பழ பூரணம்:

பைனாப்பிளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஆப்பிள், வாழைப்பழம், பேரீட்சை எல்லாவற்றையும் மிகவும் பொடியாக வெட்டி அதனுடன் கெட்டியான வெல்லப்பாகு சேர்த்து பூரணம் தயாரிக்கலாம்.

உலர்ந்த பழங்களின் பூரணம்:

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், அத்திப் பழம், அக்ரூட் பருப்பு போன்றவற்றை சிறிது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்து அதனுடன் சர்க்கரைப் பவுடர் கலந்து பூரணம் தயாரிக்கலாம்.

மெத்தென்ற அப்பம் வேண்டுமா?

200 கிராம் பச்சரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனுடன் வெல்லம், வாழைப்பழம், தேங்காய்த்துருவல், ஏலக்காய் சேர்த்து அரைக்க வேண்டும். அடுப்பில் எண்ணெயைக் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் மாவைக் கரண்டியால் காய்ந்த எண்ணெயில் ஊற்றி வேக வைக்க வேண்டும். மெத்தென்ற அப்பம் தயார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum