Top posting users this month
No user |
ஜெனிவா யோசனைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறும் அரசாங்கம்
Page 1 of 1
ஜெனிவா யோசனைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறும் அரசாங்கம்
போர் குற்றம் தொடர்பான விசாரணைக்கு ஜெனிவா மனித உரிமை பேரவை பரிந்துரைத்துள்ள யோசனையை செயற்படுத்துவதில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் சம்பந்தமாக சட்ட ஆலோசனைகளை பெற அரசாங்கம் அந்த யோசனையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அண்மையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த யோசனைக்கு அமைய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏதுவானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனிவான யோசனையை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜெனிவா யோசனையை செயற்படுத்தும் போது அதன் நடவடிக்கை மற்றும் முன்னேற்றத்தை அவதானிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் விசேட அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை ஜெனிவா யோசனை செயற்படுத்தப்படும் விதம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்காக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சமந்தா பவர் இன்று இலங்கை வந்துள்ளளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் ஆதரவுடன் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அண்மையில் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த யோசனைக்கு அமைய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தேசிய மற்றும் சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏதுவானதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் ஜெனிவான யோசனையை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஜெனிவா யோசனையை செயற்படுத்தும் போது அதன் நடவடிக்கை மற்றும் முன்னேற்றத்தை அவதானிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் விசேட அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை ஜெனிவா யோசனை செயற்படுத்தப்படும் விதம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்காக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சமந்தா பவர் இன்று இலங்கை வந்துள்ளளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum