Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான் இராஜினாமா செய்து விட்டதாக எதிரணியினர் பொய் பிரசாரம் செய்வர்!- கண்டியில் ஜனாதிபதி

Go down

நான் இராஜினாமா செய்து விட்டதாக எதிரணியினர் பொய் பிரசாரம் செய்வர்!- கண்டியில் ஜனாதிபதி Empty நான் இராஜினாமா செய்து விட்டதாக எதிரணியினர் பொய் பிரசாரம் செய்வர்!- கண்டியில் ஜனாதிபதி

Post by oviya Fri Jan 02, 2015 1:45 pm

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக எதிர்வரும் 8ம் திகதி எதிரணியினர் நிச்சயம் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். அவ்வாறான செயற்பாட்டை இவர்கள் செய்வார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காரணம் வெறுமனே பொய்ப் பிரசாரங்களிலேயே இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 8ம் திகதி ரணில் விக்ரமசிங்க பின்னுக்கு போய்விடுவார் என்பது உறுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஒருவர் என்னிடம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பஷில் போய்விட்டாரா என்று கேட்டார். நான் உடனே பஷிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி " பஷில் நீங்கள் எங்கே போய்விட்டீர்களா" என்று கேட்டேன். அந்தளவுக்கு பொய்ப்பிரசாரம் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 1815ம் ஆண்டு கண்டியில் சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டமை நாட்டுக்குத் தெரியும். தற்போது 2015ம் ஆண்டில் சதி முயற்சி நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுபபும் எமக்கு உள்ளது. எனவே நாட்டை காப்பாற்றுவதற்காக 8ம் திகதி வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.

கண்டியில் உள்ள மக்கள் கடந்தகால சம்பவங்களை நன்றாக உணர்ந்தவர்கள். அன்று தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது முழு நாடும் வேதனை அடைந்தது. பயங்கரவாதம் அந்தளவுக்கு கொடூரமாக இருந்தது.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அன்று உடன்படிக்கை செய்து புலிகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை வழங்கியது. நான் பதவிக்கு வரும்போது எனக்கு பகுதியும் சந்திரிகா குமாரதுங்க கூறுவதைப் போன்று மிஸ்டர் பிரபாகரனுக்கு ஒரு பகுதியும் காணப்பட்டது. சூனியப் பிரதேசமும் காணப்பட்டது. நாடு பிரிந்து காணப்பட்டது.

அவ்வாறான யுகம் நாட்டில் காணப்பட்டது. இராணுவத்துக்கு சீருடை தலைக்கவசம் என எதுவும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் இராணுவத்துக்கு இளைஞர்களை சேர்த்து பலப்படுத்தினோம். எனது மகனையும் கடற்படைக்கு அனுப்பி்னேன். மக்கள் எம்முடன் இருந்தமையினால் யுத்தத்தில் வெற்றி கொண்டோம். நாட்டை மீட்டோம். அவ்வாறு மீட்ட நாட்டை காட்டிக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்.

அதன் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். 2017ம் ஆண்டு ஆகும் போது கண்டியிலிருந்து கொழும்புக்கு ஒரு மணிநேரத்தில் செல்லும் பாதை வரும். தற்போது மூன்றில் ஒரு பகுதி நிதியில் அபிவிருத்தியை செய்யலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். ஆனால் ரணிலினால் மூன்றில் ஒரு பகுதியினாலும் அபிவிருத்தி செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.

நல்லாட்சி குறித்துப் பேசுகின்றனர். பட்டலந்த விவகாரத்தை மறந்துவிட்டனரா? நான் அன்று இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஜெனிவா சென்றேன். அப்போது சிறிசேன இருக்கவில்லை. நல்லாட்சியை விரும்பினால் ஏன் 30 வருட யுத்தத்தை முடிக்கவில்லை. நாங்கள் நல்லாட்சி இருந்தமையினால்தான் 30 வருட யுத்தத்தை 4 வருடங்களில் முடித்தோம்.

தற்போது பொய்க் குற்றச்சாட்டுககளை முன்வைக்கின்றனர். 10 வருடங்கள் மைத்திரிபால சிறிசேன எனது அரசாங்கத்தில் இருந்து மூன்று அமைச்சுக்களை வகித்தார். அவறறில் வேலை செய்ய முடியாததால் இன்று அந்தப் பக்கம் சென்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.

விவசாயிகளின் மகன் என்று தன்னை கூறுகின்றார். அவ்வாறு கூறும் அவர் உர நிவாரணத்தை மறந்துவிட்டார். தற்போது இலவசக் கல்வியையும் இல்லாதொழிக்க முற்படுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளர் இல்லாதுபோய்விட்டனர். அதனால்தான் அக்கட்சியின் செயலாளர் எமது பக்கம் வந்தார்.

நிறைவேறறு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவார்களாம். நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவுமே பயன்படுத்தினேன் என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum