Top posting users this month
No user |
பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி: மோடியை சந்தித்த பெற்றோர்
Page 1 of 1
பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவி: மோடியை சந்தித்த பெற்றோர்
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தின்போது உயிரிழந்த நிர்பயாவின் பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16 ம் திகதி அன்று, 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடுமையாக தாக்கப்பட்ட பின்னர், பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஆனால் 13 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
இதில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், ராம்சிங் என்பவன், கடந்த 2013 மார்ச் மாதத்தின்போது சிறையில் உயிரிழந்தான். மற்ற 5 பேரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொருவன் சிறுவன் என்பதால், அவனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக நிர்பயா ஜோதி என்ற பெயரில் சேவை நிறுவனம் நடத்தி வருவதற்கு, அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார்.
மகளை இழந்ததற்காக, அவர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி, நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக தனது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16 ம் திகதி அன்று, 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடுமையாக தாக்கப்பட்ட பின்னர், பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஆனால் 13 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
இதில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில், ராம்சிங் என்பவன், கடந்த 2013 மார்ச் மாதத்தின்போது சிறையில் உயிரிழந்தான். மற்ற 5 பேரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொருவன் சிறுவன் என்பதால், அவனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக நிர்பயா ஜோதி என்ற பெயரில் சேவை நிறுவனம் நடத்தி வருவதற்கு, அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார்.
மகளை இழந்ததற்காக, அவர்களுக்கு ஆறுதல் கூறிய மோடி, நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக தனது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum