Top posting users this month
No user |
புதிய நிதியத்தை எதிர்க்கின்றோம்: பந்துல குணவர்தன
Page 1 of 1
புதிய நிதியத்தை எதிர்க்கின்றோம்: பந்துல குணவர்தன
ஈ.பி.எப். மற்றும் ஈ.ரி.எப். ஆகியவற்றை இணைத்து புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதை எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிதியங்கள் 1958 ஆம் ஆண்டு டி.பி. இலங்கரத்னவினால், ஆரம்பிக்கப்பட்டதுடன் அவற்றில் 20 லட்சம் செயற்பாட்டு ரீதியான கணக்குகள் உள்ளன.
இந்த நிதியங்களில் 2005 ஆம் ஆண்டு 405 பில்லியன் ரூபா இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டில் அது ஆயிரத்து 400 பில்லியனாக அதிகரித்தது. வருடாந்தம் 80 முதல் 100 பில்லியன் ரூபா புதிதாக கணக்கில் சேர்க்கப்படுகிறது.
குறித்த நிதியங்களில் இருந்து 10 வீதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 6 வீதம் மாத்திரமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் இரண்டு நிதியங்களையும் இணைத்து புதிய நிதியம் ஒன்றை ஆரம்பித்து, அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயாராகி வருகிறது.
பங்குச் சந்தை என்பது அடிக்கடி ஏற்றம் இறங்கம் கண்டு வருவதால், அதில் முதலீடு செய்வது ஆபத்தானது என்பதால், கூட்டு எதிர்க்கட்சி அதனை எதிர்க்கின்றது எனவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இந்த நிதியங்கள் 1958 ஆம் ஆண்டு டி.பி. இலங்கரத்னவினால், ஆரம்பிக்கப்பட்டதுடன் அவற்றில் 20 லட்சம் செயற்பாட்டு ரீதியான கணக்குகள் உள்ளன.
இந்த நிதியங்களில் 2005 ஆம் ஆண்டு 405 பில்லியன் ரூபா இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டில் அது ஆயிரத்து 400 பில்லியனாக அதிகரித்தது. வருடாந்தம் 80 முதல் 100 பில்லியன் ரூபா புதிதாக கணக்கில் சேர்க்கப்படுகிறது.
குறித்த நிதியங்களில் இருந்து 10 வீதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 6 வீதம் மாத்திரமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் இரண்டு நிதியங்களையும் இணைத்து புதிய நிதியம் ஒன்றை ஆரம்பித்து, அந்த பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயாராகி வருகிறது.
பங்குச் சந்தை என்பது அடிக்கடி ஏற்றம் இறங்கம் கண்டு வருவதால், அதில் முதலீடு செய்வது ஆபத்தானது என்பதால், கூட்டு எதிர்க்கட்சி அதனை எதிர்க்கின்றது எனவும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum