Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு

Go down

பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு Empty பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு

Post by oviya Sat Nov 07, 2015 1:21 pm

பரணகம அறிக்கைக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரது அறிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பரணகம அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கிடையாது எனவும், ஆணையாளரது அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் வாசுதேவ நாணயக்கார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஆணையாளரது அறிக்கையில் 40,000 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பரணகம அறிக்கையில் அவ்வாறான ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பரணகம அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும் பட்சத்தில், ஆணையாளரது அறிக்கை பொய்யானது என்பது உறுதியாகியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் ஐக்கிய அமெரிக்காவின் அழுத்தங்களின் நிமிர்த்தம் பரணகம அறிக்கை இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு முன்னதாக பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கைக்கு அது பாரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு பரணகம அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum