Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் பரிதாப மரணம்….யார் காரணம்?

Go down

பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் பரிதாப மரணம்….யார் காரணம்?  Empty பெங்களூர் குண்டுவெடிப்பு: சென்னை பெண் பரிதாப மரணம்….யார் காரணம்?

Post by oviya Mon Dec 29, 2014 1:39 pm

பெங்களூரு சர்ச் சாலையில் குண்டு வெடித்ததில் சென்னையை சேர்ந்த பவானி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
பெங்களூர் நகரில் மகாத்மா காந்தி சாலை- பிரிகேட் சாலைக்கு அருகே உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் சென்னையை சேர்ந்த பவானி. மற்ற இருவரின் பெயர்கள் கார்த்திக், சந்தீப் என்று தெரியவந்துள்ளது.

தலையில் படுகாயத்துடன் பவானி மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவர் கடுமையான தலைக்காயம் காரணமாக உயிரிழந்தார்.

காயமடைந்த கார்த்திக்கின் உறவினர் தான் பவானி. சம்பவத்தின் போது பவானி, கார்த்திக்(21), கார்த்திக்கின் சகோதரி பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் குழந்தைகள் ஆகியோர் சேர்ந்து, அருகே இருந்த அமீபா என்ற விளையாட்டு கிளப்புக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து பிரியா கூறுகையில், கோக்கோநட் குரோவ் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென குண்டு வெடித்தது.

அதில் பவானியும், கார்த்திக்கும் காயமடைந்தனர். எனது அத்தை ஒரு பக்கமாக தூக்கி வீசப்பட்டார். எனது சகோதரருக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் எனது அத்தைக்குத்தான் ரத்தப் போக்கு அதிகமாக இருந்தது.

ஆட்டோவில் அவரை தூக்கிக் கொண்டு போனபோது ஆட்டோவில் ரத்தம் நிறைய வெளியேறி விட்டது. வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர்.

அந்தப் பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர் என்று கூறியுள்ளார்.

மேதி கைதுக்கு பழிவாங்கலா?

சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் @shammiwitness என்ற ட்விட்டர் கணக்கை இயக்கிய மேதி பிஸ்வாஸ் அண்மையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டிருந்தான். இதனைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் குண்டுகள் வெடிக்கும் என்று சமூக வலைதளங்கள் மூலமே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பெங்களூரு நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துவிட்டது. இந்த கோணத்தில் விசாரணை நடத்திய பெங்களூரு பொலிசார், மேதி சமூக வலைதளங்களில் தான் தீவிரமாக செயல்பட்டு வந்தான்.

மற்ற தீவிரவாதிகளைப் போல கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு நாசவேலைகளில் ஈடுபடவில்லை. இதனால் மேதி கைதுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

தேசிய புலனாய்வுத்துறை

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த இருக்கிறது.

இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழக் கூடும் என்று ஏற்கெனவே தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்திருந்தது.

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே வெடிபொருட்களே தற்போது பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் மேதி பிஸ்வாஸ் கைதுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் சிறந்த இயக்குனர்கள் யார் தெரியுமா?
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum