Top posting users this month
No user |
இந்தியாவில் இருக்கும் என் மகனை மீட்க வேண்டும்: பாகிஸ்தானை சேர்ந்த தாய் கோரிக்கை
Page 1 of 1
இந்தியாவில் இருக்கும் என் மகனை மீட்க வேண்டும்: பாகிஸ்தானை சேர்ந்த தாய் கோரிக்கை
பாகிஸ்தானை சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்தியாவில் தங்கியுள்ளதாகவும் அவனை மீட்டு தரும்படியும் அவனது தாயார் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ராஷியா பேகம் என்பவருக்கு 2004–ம் ஆண்டு விவாகரத்து நடந்துள்ளது.
அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன் முகமது ரம்ஷானை தன்னுடன் தூக்கி சென்ற தந்தை 2008–ம் ஆண்டு வங்காள தேசம் சென்றுள்ளார்.
அவர் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவர்களின் கொடுமை தாங்காமல் ரம்ஷான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
பல நகரங்களில் சுற்றித்திரிந்த அவன், மத்திய பிரதேச மாநிலம் போபால் ‘சைல்டு லைன்’ நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்திய பெண் கீதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவனது விவரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை பார்த்த ராஷியா பேகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ராஷியாபேகம் கூறுகையில், எனது மகனை பற்றி தெரிந்த பிறகு அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருக்கும் எனது மகனை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முகமது ரம்ஷானும் தான் மீண்டும் பாகிஸ்தான் சென்று தாயுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளான்.
பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்த ராஷியா பேகம் என்பவருக்கு 2004–ம் ஆண்டு விவாகரத்து நடந்துள்ளது.
அப்போது சிறுவனாக இருந்த அவரது மகன் முகமது ரம்ஷானை தன்னுடன் தூக்கி சென்ற தந்தை 2008–ம் ஆண்டு வங்காள தேசம் சென்றுள்ளார்.
அவர் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவர்களின் கொடுமை தாங்காமல் ரம்ஷான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
பல நகரங்களில் சுற்றித்திரிந்த அவன், மத்திய பிரதேச மாநிலம் போபால் ‘சைல்டு லைன்’ நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்திய பெண் கீதா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவனது விவரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை பார்த்த ராஷியா பேகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் வீடியோக்களையும், போட்டோக்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ராஷியாபேகம் கூறுகையில், எனது மகனை பற்றி தெரிந்த பிறகு அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
பாகிஸ்தான் அரசு இந்தியாவில் இருக்கும் எனது மகனை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முகமது ரம்ஷானும் தான் மீண்டும் பாகிஸ்தான் சென்று தாயுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளான்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum