Top posting users this month
No user |
Similar topics
சுரைக்காய் தட்டைபயறு குழம்பு
Page 1 of 1
சுரைக்காய் தட்டைபயறு குழம்பு
தேவையான பொருட்கள்
தட்டைபயறு – 1 கப்
சுரைக்காய் – 1 சிறியது அல்லது கத்திரிக்காய் நறுக்கியது – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
கருவேப்பிலை – சிறிது
புளி – 1 /4 எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
அரைக்க
பெரிய வெங்காயம் – 1 /4
வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 2 பல்
தேங்காய் – 4 மேசைக்கரண்டி
சிக்கன் மசாலாதூள் – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
செய்முறை
சுரைக்காயை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் 3 கப் தண்ணீர், தட்டைபயறு சேர்த்து 3 விசில்கள் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்.
ஆவி அடங்கியதும் அரிந்து வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியூமாறு வதக்கி கொள்ளவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன் வேக வைத்து வைத்துள்ள தட்டபயீர், சுரைக்காய் மற்றும் மஞ்சல்தூள், உப்பு, மற்றும் புளி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
புளி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இப்பொழுது சுவையான சுரைக்காய் தட்டைபயறு குழம்பு குழம்பு தயார்.
இந்த குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மசாலா அரைப்பதற்கு பதிலாக சாம்பார் தூள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தட்டைபயறு – 1 கப்
சுரைக்காய் – 1 சிறியது அல்லது கத்திரிக்காய் நறுக்கியது – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
கருவேப்பிலை – சிறிது
புளி – 1 /4 எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
அரைக்க
பெரிய வெங்காயம் – 1 /4
வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 /4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 2 பல்
தேங்காய் – 4 மேசைக்கரண்டி
சிக்கன் மசாலாதூள் – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
செய்முறை
சுரைக்காயை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் 3 கப் தண்ணீர், தட்டைபயறு சேர்த்து 3 விசில்கள் விட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்.
ஆவி அடங்கியதும் அரிந்து வைத்துள்ள சுரைக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு மசியூமாறு வதக்கி கொள்ளவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன் வேக வைத்து வைத்துள்ள தட்டபயீர், சுரைக்காய் மற்றும் மஞ்சல்தூள், உப்பு, மற்றும் புளி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
புளி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இப்பொழுது சுவையான சுரைக்காய் தட்டைபயறு குழம்பு குழம்பு தயார்.
இந்த குழம்பு சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மசாலா அரைப்பதற்கு பதிலாக சாம்பார் தூள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum