Top posting users this month
No user |
ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம்..அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தேன்: மோடி
Page 1 of 1
ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம்..அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தேன்: மோடி
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், வட மாநிலங்கள் மற்றும் சென்னையிலும் உணரப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மற்றும் வடபழனியில் பெரும்பாலான இடங்களில் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து அறிந்ததும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயாராக இருங்கள் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரிக்டரில் இது 7.5 அலகுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் மற்றும் வடபழனியில் பெரும்பாலான இடங்களில் இன்று மதியம் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து அறிந்ததும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், தனது டிவிட்டர் பக்கத்தில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயாராக இருங்கள் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்துகுஷ் மலையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரிக்டரில் இது 7.5 அலகுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum