Top posting users this month
No user |
Similar topics
பரங்கிக்காய் கூட்டு
Page 1 of 1
பரங்கிக்காய் கூட்டு
தேவையான பொருள்கள்:
பரங்கிக்காய் – அரை கிலோ
துவரம்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
மிளகாய் பொடி – அரை ஸ்பூன்
தனியாபொடி – அரை ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
மிளகாய் வற்றல் -3
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
இஞ்சி – கால் அங்குலம்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோல் விதை நீக்கிக் கொண்டு காலங்குல துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய்வற்றல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொண்டு ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும்.
தேங்காயை துருவி இதே வாணலியில் மிதமான தீயில் சிறிது கருகும் வரை வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். இதையும் ஏற்கெனவே பொடித்து வைத்துள்ளவற்றோடு சேர்த்து வைக்கவும்.
துவரம்பருப்பை பெருங்காயம், மஞ்சள்பொடி சேர்த்து குழைய வேகவிடவும். இஞ்சியை தோல் நீக்கித் தட்டிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து தட்டிய இஞ்சி சேர்த்து வதக்கவும். இஞ்சி வாசம் வரும் வரை வதங்கியதும் பரங்கிக்காயைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
இதுவும் சிறிது வதங்கியதும் மிளகாய்பொடி தனியாபொடி சேர்த்து வதக்கி கால் கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் வெந்தால் போதும். இடையில் ஒருமுறை கிளறி விடவும். ஐந்து நிமிடத்தில் காய் வெந்து பொடி வாசனை போய்விடும்.
இதை இறக்கப்போகும் முன்பாக பொடிசெய்து வைத்துள்ளவற்றையும் கறிவேப்பலை கொத்தமல்லியும் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.
சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.
பரங்கிக்காய் – அரை கிலோ
துவரம்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
மிளகாய் பொடி – அரை ஸ்பூன்
தனியாபொடி – அரை ஸ்பூன்
தேங்காய் – அரை மூடி
மிளகாய் வற்றல் -3
கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
இஞ்சி – கால் அங்குலம்
எண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பரங்கிக்காயை தோல் விதை நீக்கிக் கொண்டு காலங்குல துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய்வற்றல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொண்டு ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும்.
தேங்காயை துருவி இதே வாணலியில் மிதமான தீயில் சிறிது கருகும் வரை வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். இதையும் ஏற்கெனவே பொடித்து வைத்துள்ளவற்றோடு சேர்த்து வைக்கவும்.
துவரம்பருப்பை பெருங்காயம், மஞ்சள்பொடி சேர்த்து குழைய வேகவிடவும். இஞ்சியை தோல் நீக்கித் தட்டிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து தட்டிய இஞ்சி சேர்த்து வதக்கவும். இஞ்சி வாசம் வரும் வரை வதங்கியதும் பரங்கிக்காயைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
இதுவும் சிறிது வதங்கியதும் மிளகாய்பொடி தனியாபொடி சேர்த்து வதக்கி கால் கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் வெந்தால் போதும். இடையில் ஒருமுறை கிளறி விடவும். ஐந்து நிமிடத்தில் காய் வெந்து பொடி வாசனை போய்விடும்.
இதை இறக்கப்போகும் முன்பாக பொடிசெய்து வைத்துள்ளவற்றையும் கறிவேப்பலை கொத்தமல்லியும் சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.
சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum