Top posting users this month
No user |
மணத்தக்காளி குழம்பு
Page 1 of 1
மணத்தக்காளி குழம்பு
தேவையான பொருள்கள்:
பச்சை மணத்தக்காளி = தேவையான அளவு
சின்ன வெங்காயம் = சிறிதளவு
பூண்டு = 4 பல்
தக்காளி = 1
தேங்காய் பால் = 1 கப்
புளி = சிறிய உருண்டை
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = தேவையான அளவு
குழம்பு பொடி = 2 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிதளவு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
மணத்தக்காளியை கழுவி சுத்தம் செய்து காம்பு நீக்கி கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். தக்காளியை வெட்டி வைத்து கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும் குழம்பு பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மற்றும் உப்பு போட்டு கிளறவும்.
பிறகு மணத்தக்காளியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிக்கரைசலை ஊற்றி காய் வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு இதில் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி குழம்பு தயார். இதை சாதம், இட்லி, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
மணத்தக்காளியில் அதிக அளவில் புரதச்சத்துக்களும், இரும்பு சத்துக்களும், உயிர் சத்துக்களும் காணப்படுகிறது.
மேலும் புரதம், தாது உப்புகள், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் “பி” மற்றும் வைட்டமின் “சி” ஆகியவை காணப்படுகிறது. இவை உடலுக்கு, மனதிற்கு சுறுசுறுப்பை தருகிறது.
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வாய் புண் மற்றும் வயிற்று புண்களை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. கண் பார்வை தெளிவாக்க உதவுகிறது. பசியின்மையை குறைத்து செரிமானத்திற்கு உதவும்.
பச்சை மணத்தக்காளி = தேவையான அளவு
சின்ன வெங்காயம் = சிறிதளவு
பூண்டு = 4 பல்
தக்காளி = 1
தேங்காய் பால் = 1 கப்
புளி = சிறிய உருண்டை
மஞ்சள் பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = தேவையான அளவு
குழம்பு பொடி = 2 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிதளவு
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
மணத்தக்காளியை கழுவி சுத்தம் செய்து காம்பு நீக்கி கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். தக்காளியை வெட்டி வைத்து கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வதங்கியதும் குழம்பு பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மற்றும் உப்பு போட்டு கிளறவும்.
பிறகு மணத்தக்காளியை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிக்கரைசலை ஊற்றி காய் வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு இதில் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மணத்தக்காளி குழம்பு தயார். இதை சாதம், இட்லி, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றோடு சாப்பிட சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
மணத்தக்காளியில் அதிக அளவில் புரதச்சத்துக்களும், இரும்பு சத்துக்களும், உயிர் சத்துக்களும் காணப்படுகிறது.
மேலும் புரதம், தாது உப்புகள், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் “பி” மற்றும் வைட்டமின் “சி” ஆகியவை காணப்படுகிறது. இவை உடலுக்கு, மனதிற்கு சுறுசுறுப்பை தருகிறது.
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வாய் புண் மற்றும் வயிற்று புண்களை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. கண் பார்வை தெளிவாக்க உதவுகிறது. பசியின்மையை குறைத்து செரிமானத்திற்கு உதவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum