Top posting users this month
No user |
Similar topics
அவரைக்காய் உசிலி
Page 1 of 1
அவரைக்காய் உசிலி
தேவையான பொருள்கள்:
அவரைக்காய் = 250 கிராம்
கடலை பருப்பு = அரை கப்
துவரம் பருப்பு = அரை கப்
மிளகாய் வற்றல் = 6
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 2
சோம்பு = 1 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
இஞ்சி = சிறிதளவு
தேங்காய் = அரை மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அவரைக்காயை பொடியாக நறுக்கவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விட்டுப் பின் இறுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
ஊறிய துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் பெருங்காயம், மிளகாய் வற்றல், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். சோம்பை பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அவரைக்காய், அரைத்த பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும். இது நன்றாக வதங்கி காய் வேகும் வரை கிளறவும்.
தேவையானால் மேலும் சிறிது எண்ணெய் விடவும். தேங்காய் துருவி சேர்க்கவும். கொத்தமல்லி, சோம்பு பொடி சேர்க்கவும்.
சுவையான அவரைக்காய் உசிலி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
அவரைக்காய் = 250 கிராம்
கடலை பருப்பு = அரை கப்
துவரம் பருப்பு = அரை கப்
மிளகாய் வற்றல் = 6
சின்ன வெங்காயம் = 100 கிராம்
பச்சை மிளகாய் = 2
சோம்பு = 1 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிது
இஞ்சி = சிறிதளவு
தேங்காய் = அரை மூடி
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
எண்ணெய் = 50 கிராம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அவரைக்காயை பொடியாக நறுக்கவும். கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விட்டுப் பின் இறுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும்.
ஊறிய துவரம் பருப்பையும், கடலை பருப்பையும் பெருங்காயம், மிளகாய் வற்றல், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். சோம்பை பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனோடு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் அவரைக்காய், அரைத்த பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும். இது நன்றாக வதங்கி காய் வேகும் வரை கிளறவும்.
தேவையானால் மேலும் சிறிது எண்ணெய் விடவும். தேங்காய் துருவி சேர்க்கவும். கொத்தமல்லி, சோம்பு பொடி சேர்க்கவும்.
சுவையான அவரைக்காய் உசிலி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum