Top posting users this month
No user |
Similar topics
கொத்தவரைக்காய் உசிலி
Page 1 of 1
கொத்தவரைக்காய் உசிலி
தேவையான பொருள்கள்:
கொத்தவரைக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
கடலை பருப்பு = 50 கிராம்
உளுத்தம் பருப்பு = 4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பச்சை மிளகாய் = 2
பூண்டு = 10 பல்
இஞ்சி = காலங்குலம்
மிளகாய் வற்றல் = 4
தேங்காய் = கால் மூடி
சோம்பு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கொத்தவரைக்காயை அலம்பி நீரை வடித்து விட்ட பின் பொடி பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சோம்பை பொடி செய்து கொள்ளவும்.
கடலை பருப்பையும், துவரம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் 1 மணி நேரம் ஊற விட்டு நீர் வடித்துக் கொண்டு இஞ்சி, மிளகாய் வற்றலோடு ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் அரைத்த பருப்பையும், காயையும், உப்பையும் சேர்த்து வதக்கவும். பருப்பும்,காயும் சேர்ந்து வேகும் வரை வதக்கவும். தண்ணீர் தேவைபடுமானால் சிறிது தெளித்துக் கொள்ளவும்.
இவை எல்லாம் வெந்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறி சோம்பு பொடி , துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான கொத்தவரைக்காய் உசிலி தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கொத்தவரைக்காயில் புரதம், ஃபைபர், ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கிறது.
கொத்தவரைக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
கடலை பருப்பு = 50 கிராம்
உளுத்தம் பருப்பு = 4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 50 கிராம்
பச்சை மிளகாய் = 2
பூண்டு = 10 பல்
இஞ்சி = காலங்குலம்
மிளகாய் வற்றல் = 4
தேங்காய் = கால் மூடி
சோம்பு = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = அரை கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கொத்தவரைக்காயை அலம்பி நீரை வடித்து விட்ட பின் பொடி பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சோம்பை பொடி செய்து கொள்ளவும்.
கடலை பருப்பையும், துவரம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் 1 மணி நேரம் ஊற விட்டு நீர் வடித்துக் கொண்டு இஞ்சி, மிளகாய் வற்றலோடு ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் அரைத்த பருப்பையும், காயையும், உப்பையும் சேர்த்து வதக்கவும். பருப்பும்,காயும் சேர்ந்து வேகும் வரை வதக்கவும். தண்ணீர் தேவைபடுமானால் சிறிது தெளித்துக் கொள்ளவும்.
இவை எல்லாம் வெந்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறி சோம்பு பொடி , துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான கொத்தவரைக்காய் உசிலி தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கொத்தவரைக்காயில் புரதம், ஃபைபர், ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum