Top posting users this month
No user |
Similar topics
குணுக்கு
Page 1 of 1
குணுக்கு
தேவையானவை :
கடலை பருப்பு – 3/4 கப்
துவரம்பருப்பு – 1/2 கப்
உளுத்தம்பருப்பு – 1/2 கப்
பயத்தம்பருப்பு – 1/2 கப்
பச்சரிசி – 1/4 கப்
வர மிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
(விருப்பமிருந்தால் )
தேங்காய்துருவல் – 5 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – பொரிக்கத் தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை – கட் செய்தது
செய்முறை :
இதில், அரிசி, பருப்பு ஆகிவற்றை, 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதிலேயே, பெருங்காயம், வர மிளகாய், இரண்டையும் சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர், மிக்சியில், நல்ல நைசாக இல்லாமல், கொஞ்சம் ஒன்று இரண்டாக இருக்கும் பதத்தில், அரைத்துக்கொள்ளவும்.
அரைக்கும் போது, வெங்காயம், வர மிளகாய், தேங்காய்துருவல் இவற்றை, முதலில் போட்டு, அதன் மீது பருப்பு, அரிசி கலவையைப் போட்டு, உப்பு சேர்த்து, அரைக்கவும். அப்போதுதான், வெங்காயம், மிளகாய், நன்றாக அரைபடும்.
அரைத்தக் கலவையில், கட் செய்த கொத்தமல்லி, கருவேப்பிலை, சிறிது காய்ச்சிய எண்ணை (2 ஸ்பூன் ) இவற்றை விடவும்
வெங்காயத்தை அரைக்காமலும், அப்படியே துருவியும் போடலாம்.
இப்போது அடுப்பில், ஒரு வாணலியில், எண்ணையைக் காய வைத்து, லேசாகப் புகை வந்தவுடன், இந்த அரைத்தக் கலவையை, கையால் கிள்ளிக் கிள்ளி, போடவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ஒரு ஈட்டிற்கு, 10 குணுக்கு போல போட்டு எடுக்கலாம். திருப்பி விடவும்.
நல்ல கோல்டன் பிரவுன் கலர் வந்த பிறகு, எண்ணையின் சட சடப்பு அடங்கியவுடன் எடுத்து வடிதட்டில் வைக்கவும்.
எண்ணை வடிந்த பிறகு, எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி, தக்காளி சாஸ், போன்றவை, நன்றாக இருக்கும்.
இதில் பச்சரிசி, அதிகக் கடலைபருப்பு, காய்ச்சிய எண்ணை, ஆகியவை சேர்ப்பது, நல்ல கர கரப்பாக இருப்பதற்கு.
இது ஒரு சுவையான, ஹெல்தியான மாலை நேர ஸ்நாக். அனைத்துப் பருப்புகளும் இருப்பது, உடலுக்கு நல்லது.
கடலை பருப்பு – 3/4 கப்
துவரம்பருப்பு – 1/2 கப்
உளுத்தம்பருப்பு – 1/2 கப்
பயத்தம்பருப்பு – 1/2 கப்
பச்சரிசி – 1/4 கப்
வர மிளகாய் – 5
பெரிய வெங்காயம் – 2
(விருப்பமிருந்தால் )
தேங்காய்துருவல் – 5 டீஸ்பூன்
பெருங்காயம்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – பொரிக்கத் தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை – கட் செய்தது
செய்முறை :
இதில், அரிசி, பருப்பு ஆகிவற்றை, 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதிலேயே, பெருங்காயம், வர மிளகாய், இரண்டையும் சேர்த்து ஊற வைக்கவும்.
பின்னர், மிக்சியில், நல்ல நைசாக இல்லாமல், கொஞ்சம் ஒன்று இரண்டாக இருக்கும் பதத்தில், அரைத்துக்கொள்ளவும்.
அரைக்கும் போது, வெங்காயம், வர மிளகாய், தேங்காய்துருவல் இவற்றை, முதலில் போட்டு, அதன் மீது பருப்பு, அரிசி கலவையைப் போட்டு, உப்பு சேர்த்து, அரைக்கவும். அப்போதுதான், வெங்காயம், மிளகாய், நன்றாக அரைபடும்.
அரைத்தக் கலவையில், கட் செய்த கொத்தமல்லி, கருவேப்பிலை, சிறிது காய்ச்சிய எண்ணை (2 ஸ்பூன் ) இவற்றை விடவும்
வெங்காயத்தை அரைக்காமலும், அப்படியே துருவியும் போடலாம்.
இப்போது அடுப்பில், ஒரு வாணலியில், எண்ணையைக் காய வைத்து, லேசாகப் புகை வந்தவுடன், இந்த அரைத்தக் கலவையை, கையால் கிள்ளிக் கிள்ளி, போடவும்.
அடுப்பை சிம்மில் வைக்கவும்.
ஒரு ஈட்டிற்கு, 10 குணுக்கு போல போட்டு எடுக்கலாம். திருப்பி விடவும்.
நல்ல கோல்டன் பிரவுன் கலர் வந்த பிறகு, எண்ணையின் சட சடப்பு அடங்கியவுடன் எடுத்து வடிதட்டில் வைக்கவும்.
எண்ணை வடிந்த பிறகு, எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்குத் தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி, தக்காளி சாஸ், போன்றவை, நன்றாக இருக்கும்.
இதில் பச்சரிசி, அதிகக் கடலைபருப்பு, காய்ச்சிய எண்ணை, ஆகியவை சேர்ப்பது, நல்ல கர கரப்பாக இருப்பதற்கு.
இது ஒரு சுவையான, ஹெல்தியான மாலை நேர ஸ்நாக். அனைத்துப் பருப்புகளும் இருப்பது, உடலுக்கு நல்லது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum