Top posting users this month
No user |
Similar topics
உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்ல: தடயவியல் நிபுணர்கள்
Page 1 of 1
உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்ல: தடயவியல் நிபுணர்கள்
உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டவர் வைத்திருந்தது மாட்டிறைச்சி அல்ல, மட்டன் தான் என்று தடயவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாத்ரி மாவட்டத்தில் பிசாதா கிராமத்தில் பசு மாட்டை வெட்டி சாப்பிட்டதாக முகம்மது இக்லாக் என்ற இஸ்லாமியர் அடித்து கொல்லப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இக்லாக் வீட்டில் கடந்த மாதம் 28ம் திகதி குளிர் சாதனப் பெட்டியில் இருந்த இறைச்சியை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
அந்த இறைச்சியை பரிசோதனைக்கு உட்படுத்திய தடயவியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வு முடிவு அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த அறிக்கையில், முகம்மது இக்லாக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டு இறைச்சி அல்ல. அது மட்டன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அந்த இறைச்சி துண்டுகளை முதராவில் உள்ள நவீன பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினர்.
அங்கு நடந்த ஆய்விலும், இக்லாக் வீட்டில் இருந்தது மட்டன்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி தின்றதாக கூறி இக்லாக் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டில் இருந்தது மட்டன் தான் என்று தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இக்லாக் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி தங்கள் சொந்த கிராமத்தை காலி செய்துவிட்டு டெல்லிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாத்ரி மாவட்டத்தில் பிசாதா கிராமத்தில் பசு மாட்டை வெட்டி சாப்பிட்டதாக முகம்மது இக்லாக் என்ற இஸ்லாமியர் அடித்து கொல்லப்பட்டார்.
இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இக்லாக் வீட்டில் கடந்த மாதம் 28ம் திகதி குளிர் சாதனப் பெட்டியில் இருந்த இறைச்சியை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
அந்த இறைச்சியை பரிசோதனைக்கு உட்படுத்திய தடயவியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வு முடிவு அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
அந்த அறிக்கையில், முகம்மது இக்லாக் வீட்டில் கைப்பற்றப்பட்ட இறைச்சி மாட்டு இறைச்சி அல்ல. அது மட்டன் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அந்த இறைச்சி துண்டுகளை முதராவில் உள்ள நவீன பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினர்.
அங்கு நடந்த ஆய்விலும், இக்லாக் வீட்டில் இருந்தது மட்டன்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி தின்றதாக கூறி இக்லாக் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டில் இருந்தது மட்டன் தான் என்று தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இக்லாக் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி தங்கள் சொந்த கிராமத்தை காலி செய்துவிட்டு டெல்லிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காட்டுப்பகுதியில் கிடைத்தது ஷீனா போராவின் உடல் தான்: தடயவியல் சோதனையில் உறுதி
» கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி? டெல்லி பொலிசார் அதிரடி சோதனை
» நூற்றாண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
» கேரள அரசு இல்லத்தில் பசு மாட்டிறைச்சி? டெல்லி பொலிசார் அதிரடி சோதனை
» நூற்றாண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum