Top posting users this month
No user |
ஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி யோகம்
Page 1 of 1
ஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி யோகம்
★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.
★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum