Top posting users this month
No user |
ராகு, கேது, ஸர்ப்ப தோஷங்களை நீக்கும் ஸ்ரீ ல
Page 1 of 1
ராகு, கேது, ஸர்ப்ப தோஷங்களை நீக்கும் ஸ்ரீ ல
தெய்வம் பூஜித்த தெய்வம்
இராமாயண காலத்தில் ப்ரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்ட ஹனுமன் ஸ்வாமி, மேல் வெண்பாக்கம் பெருமாள் – தாயாரை வழிபட்டு தோஷத்திலிருந்து விடுபட்டதாக வரலாறு. ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்தே காப்பாற்றியவர் என்பதால் இந்தப் பெருமாளை வழிபடுபவர்கள், அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
தம்பதிகள் வழிபட்டால்…
பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் சேவை சாதிக்கிறார்கள். எனவே இப்பெருமாளை மன ஒற்றுமை இல்லாத தம்பதியர் வழிபட்டால் மன ஒற்றுமை மலர்ந்து வாழ்க்கை ஒளி பெறும்.
ஆதிசேஷன்
பெருமாள் திருமார்பில் ஆதிசேஷனே வைஜயந்தி மாலையாய்ப் படர்ந்து, ஐந்து தலை நாகமாய் அருளும் அதிசயத்தை இவ்வாலயத்தில் காணலாம். எனவே இப்பெருமாளை பக்தியுடன் வழிபடுபவருக்கு ராகு, கேது மற்ற எல்லாவித ஸர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் காளிங்கன் என்னும் ராஜஸர்ப்பம் பெருமாள் – தாயாரை வழிபட்ட திருத்தலம் இது.
பிள்ளைக்காரன் ஸ்வாமி
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் வெள்ளிக் கிழமைகளில் இப்பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, பால் பாயச நைவேத்தியப் பிரசாதத்தை உட்கொண்டால் பெருமாள் – தாயாரின் திருவருளால் தெய்வீகமான குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிரதி மாதம் உத்திராட திருநட்சத்திரத்தில், தோஷங்கள் விலகி குழந்தை வரம் கிடைக்கவும், திருமணப் பேறு உண்டாகவும், தாம்பத்திய அன்னியோன்யம் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து வாழவும், எல்லா மங்களங்களும் கிடைக்கப் பெறவும் ஸ்ரீலக்ஷ்மிநாராயண ஹ்ருதய பாராயணமும், ஸ்ரீலக்ஷ்மி நாராயண நவகலச ஹோமமும் நடைபெறுகிறது.
மேலும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகவும் மேல் வெண்பாக்கம் திருத்தலத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
அமைவிடம்:
சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். பனப்பாக்கம் (பாலுசெட்டி சத்திரம் – தாமல் – பனப்பாக்கம்) செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இராமாயண காலத்தில் ப்ரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்ட ஹனுமன் ஸ்வாமி, மேல் வெண்பாக்கம் பெருமாள் – தாயாரை வழிபட்டு தோஷத்திலிருந்து விடுபட்டதாக வரலாறு. ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்தே காப்பாற்றியவர் என்பதால் இந்தப் பெருமாளை வழிபடுபவர்கள், அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
தம்பதிகள் வழிபட்டால்…
பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் சேவை சாதிக்கிறார்கள். எனவே இப்பெருமாளை மன ஒற்றுமை இல்லாத தம்பதியர் வழிபட்டால் மன ஒற்றுமை மலர்ந்து வாழ்க்கை ஒளி பெறும்.
ஆதிசேஷன்
பெருமாள் திருமார்பில் ஆதிசேஷனே வைஜயந்தி மாலையாய்ப் படர்ந்து, ஐந்து தலை நாகமாய் அருளும் அதிசயத்தை இவ்வாலயத்தில் காணலாம். எனவே இப்பெருமாளை பக்தியுடன் வழிபடுபவருக்கு ராகு, கேது மற்ற எல்லாவித ஸர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் காளிங்கன் என்னும் ராஜஸர்ப்பம் பெருமாள் – தாயாரை வழிபட்ட திருத்தலம் இது.
பிள்ளைக்காரன் ஸ்வாமி
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் வெள்ளிக் கிழமைகளில் இப்பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, பால் பாயச நைவேத்தியப் பிரசாதத்தை உட்கொண்டால் பெருமாள் – தாயாரின் திருவருளால் தெய்வீகமான குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிரதி மாதம் உத்திராட திருநட்சத்திரத்தில், தோஷங்கள் விலகி குழந்தை வரம் கிடைக்கவும், திருமணப் பேறு உண்டாகவும், தாம்பத்திய அன்னியோன்யம் மற்றும் பிரிந்து வாழும் தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து வாழவும், எல்லா மங்களங்களும் கிடைக்கப் பெறவும் ஸ்ரீலக்ஷ்மிநாராயண ஹ்ருதய பாராயணமும், ஸ்ரீலக்ஷ்மி நாராயண நவகலச ஹோமமும் நடைபெறுகிறது.
மேலும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாகவும் மேல் வெண்பாக்கம் திருத்தலத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.
அமைவிடம்:
சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். பனப்பாக்கம் (பாலுசெட்டி சத்திரம் – தாமல் – பனப்பாக்கம்) செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum