Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா. சபையில் ஆசிய பிரதிநிதித்துவத்திற்கு ஜப்பான் மிகவும் தகுதியான நாடு!– பிரதமர் ரணில்

Go down

ஐ.நா. சபையில் ஆசிய பிரதிநிதித்துவத்திற்கு ஜப்பான் மிகவும் தகுதியான நாடு!– பிரதமர் ரணில் Empty ஐ.நா. சபையில் ஆசிய பிரதிநிதித்துவத்திற்கு ஜப்பான் மிகவும் தகுதியான நாடு!– பிரதமர் ரணில்

Post by oviya Mon Oct 05, 2015 1:35 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தேசிய பொறிமுறையில் பதிலளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு கூடிய உதவியை ஜப்பான் வழங்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பொமியோ கிஷிடா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று உறுதியளித்துள்ளார்.
சில காலமாக வீழ்ச்சியடைந்திருந்த தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய நல்லாட்சி அரசாங்கம் புதிய நாட்டை உருவாக்க மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில் ஜப்பான் இலங்கைக்கு சக்தியாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் புதிய தேசிய அரசாங்கம் புதிய நாட்டை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜப்பான் முழுமையான உதவிகளை வழங்கும்.

கடந்த தசாப்தத்தை போல், ஒரு பக்கத்திற்கு சார்பின்றி, நடுநிலையான வெளிநாட்டு கொள்கையை புதிய அரசாங்கம் கடைப்பிடிப்பதை நான் பாராட்டுகிறேன்.

அடுத்த சில தினங்களில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இலங்கையின் அபிவிருத்தியில், தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தை அடிப்படையாக கொண்ட உதவிகளை வழங்க ஜப்பான் எந்த சந்தர்ப்பத்திலும் தயங்காது.

இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தினதும் ஜப்பான் மக்களினதும் முழுமையான உதவிகள் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவான தேசிய பொறிமுறை ஊடான செயற்பாடுகளுக்கு ஜப்பான் கூடிய உதவிகளை வழங்கும். இது தொடர்பில் ஜப்பான் மீது முழுமையா நம்பிக்கை வையுங்கள்.

அரச மற்றும் தனியார் துறை முதலீடுகளுக்காக இலங்கைக்குள் சிறந்த சூழலை உருவாக்க தற்போதைய தேசிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் தொடர்ந்தும் அவதானதுடன் இருப்போம் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

சுதந்திரமடைந்த பின்னர், இலங்கையுடன் ஆரம்பத்தில் இந்தியா, பாகிஸ்தான், பர்மா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய 5 நாடுகளே தொடர்புகளை வைத்திருந்தன.

ஜப்பானுக்கு இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் அடிப்படையை ஜே.ஆர். ஜெயவர்தன ஏற்படுத்தினார். பின்னர், இரு நாடுகளில் தலைவர்கள் இதனை முன்னெடுத்துச் சென்றனர்.

6 தசாப்தங்களுக்கு பின்னர், இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை பாதுகாப்பதில் ஜப்பான் அரசாங்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஆசிய பிராந்திய பிரதிநிதித்துவத்திற்கு ஜப்பான் மிகவும் தகுதியான நாடு என்பது எமது உணர்வாகும். அதற்காக ஜப்பானுக்கு எந்த உதவிகளையும் வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடனான இந்த சந்திப்பில், அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, சுசில் பிரேமஜயந்த உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum