Top posting users this month
No user |
வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்வாதார திட்டங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது!
Page 1 of 1
வடமாகாணத்தின் பல பகுதிகளில் வாழ்வாதார திட்டங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது!
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் கிராம மாதர், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு அமைக்கப்பட்ட வாழ்வாதார திட்டங்கள் மாகாணத்தின் பல பகுதிகளில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் கிராமத்தில் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையம், மன்னார் மாவட்ட பாலியாறு மற்றும் பனங்கட்டுக்கொட்டு ஆகிய கிராமங்களில் அரைக்கும் ஆலைகள் என்பன,
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில்,
இவ்வாறான கிராம மட்ட அமைப்புக்களை சரியான முறையில் நடாத்துவதில் தமது கிராம அபிவிருத்தி திணைக்களம் சரியான முறையில் வினைத்திறனாக இயங்கி வருவதாகவும்,
அதன் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும், இவ் உதவித்திட்டங்களை மாதர் கிராம அமைப்புக்கள் அல்லது கிராம அபிவிருத்தி சங்கங்கள் சரியான முறையில் பயன்படுத்தி தமது கிராமத்து மக்களை வாழ்வாதாரத்தில் வளப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பை உடையவர்கள் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் கிராமத்தில் கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையம், மன்னார் மாவட்ட பாலியாறு மற்றும் பனங்கட்டுக்கொட்டு ஆகிய கிராமங்களில் அரைக்கும் ஆலைகள் என்பன,
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில்,
இவ்வாறான கிராம மட்ட அமைப்புக்களை சரியான முறையில் நடாத்துவதில் தமது கிராம அபிவிருத்தி திணைக்களம் சரியான முறையில் வினைத்திறனாக இயங்கி வருவதாகவும்,
அதன் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு தமது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும், இவ் உதவித்திட்டங்களை மாதர் கிராம அமைப்புக்கள் அல்லது கிராம அபிவிருத்தி சங்கங்கள் சரியான முறையில் பயன்படுத்தி தமது கிராமத்து மக்களை வாழ்வாதாரத்தில் வளப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பை உடையவர்கள் என்றும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum